இசைஞானி இளையராஜாவின் மகனும் தமிழ் சினிமாவின் பிரபல இசை அமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா மீது முகமது ஜாவித் என்பவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அதிரடியான புகார் ஒன்றை கூறி இருக்கிறார். அதில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வாடகை வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வசித்து வருகிறார்.
இந்த வீடு எனது சகோதரிக்கு சொந்தமானது. இதுநாள் வரை அவர் இந்த வீட்டிற்கு வாடகை வாங்கி கொடுக்கவே இல்லை. கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் வரை பாக்கி கிடக்கிறது. இது குறித்து எனது சகோதரி பலமுறை அவரிடம் கேட்டுக் கூட அவர் கொடுக்க மறுத்திருக்கிறார் நான் வாடகை பணம் கேட்பதற்கு செல்போனில் அழைத்தபோதும் அவர் போனை எடுக்கவில்லை.
அது மட்டும் இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு காலி செய்வதாக பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூறினார்கள். எனவே அவரிடம் இருந்து வாடகை பாக்கி மற்றும் வீடு சேதத்துக்கான இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டும் என்று அந்த புகாரில் அவர் கூறியிருக்கிறார். இதை அடுத்து இந்த புகாரை போலீஸ் விசாரணை நடத்த துவங்கியிருக்கின்றனர்.
இந்த புகார் ஆனது தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த இந்த விஷயம் தற்போது கோலிவுட் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மிகப்பெரிய இசை குடும்பத்தை சேர்ந்த யுவன் சங்கர் ராஜாவிடம் பணமா இருக்காது?
ஏன் இப்படி அடுத்தவர் வயிற்றிச்சலுக்கு ஆளாகிறார்? என கூறிய யுவன் சங்கர் ராஜாவை பலரும் திட்டி தீத்து விமர்சித்து வருகிறார்கள். ஒரு படத்திற்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் யுவன் சங்கர் ராஜாவால் வாடகை பணம் கொடுக்கும் முடியவில்லையா? என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஆனால், இந்த விவகாரம் குறித்து யுவன் சங்கர் ராஜா தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை. யுவன் சங்கர் ராஜா தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.