சினிமா / TV

நிலம் தந்த பாஜக.. பாதுகாக்க முயற்சிக்கும் காங்கிரஸ்.. ரன்யா ராவைச் சுற்றுல் அரசியல் பின்புலம்!

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ் மீது ஆளும் காங்கிரஸ் அமைச்சர் – பாஜகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: “கர்நாடக அமைச்சர் ஒருவர் ரன்யா ராவைப் பாதுகாக்க முயற்சிக்கிறார். காங்கிரஸ் கட்சியினர் ஊழல் புரிவதற்கும், சர்வதேச தங்கக் கடத்தல் கும்பலுடன் கூட்டு வைக்கவும் தயங்க மாட்டார்கள். அரசியல் செல்வாக்கில்லாமல் ஒரு பெண்ணால் இவ்வளவு பெரிய அளவில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டிருக்க முடியாது.

எனவே, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்க வேண்டும். அவ்வாறு விசாரித்தால், காங்கிரஸ் அமைச்சர் உள்பட பலர் சிக்குவர்” என கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், “ரன்யா ராவ் வழக்கில் போலீஸ் விசாரணை நேர்மையான முறையில் நடைபெற்று வருகிறது.

குற்றவாளியைக் காப்பாற்ற வேண்டிய தேவை காங்கிரஸ் கட்சியினருக்கு இல்லை. கடந்த 2023ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் ரன்யா ராவுக்குச் சொந்தமான நிறுவனம் இரும்புக் கம்பிகள் தயாரிக்க, சிரா அருகே 12 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாஜகவினருக்கு ரன்யா ராவுடன் நேரடித் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அரசு வீடு வாங்கித் தாரேன்.. மாநகராட்சி அதிகாரிகளை கைகாட்டி லட்சக்கணக்கில் மோசடி!

முன்னதாக, கர்நாடக டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான‌ ரன்யா ராவ் (32), கடந்த மார்ச் 3ஆம் தேதி துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் மீது வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, அவரது வீட்டில் சோதனையிட்டனர். இந்தச் சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கின‌. தற்போது அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வைக்கப்பட்டுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!

தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…

9 hours ago

தறிகெட்டு ஓடும் ‘டிராகன்’…மொத்த வசூல் இத்தனை கோடியா.!

காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…

10 hours ago

டி.ராஜேந்திரனுக்கு என்ன ஆச்சு…ஆளே அடையாளம் தெரியல..வைரலாகும் போட்டோ.!

டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…

11 hours ago

வெறி நாய் கடிக்கு சிகிச்சை எடுத்த இளைஞர் உயிரை மாய்த்த சோகம் : கோவை அரசு மருத்துவமனையில் ஷாக்!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…

12 hours ago

பாக்ஸ் ஆபீஸ் சம்பவம் ரெடி மாமே…வெளிவந்த குட் ‘பேட் அக்லி’ அப்டேட்.!

பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…

12 hours ago

விஜய்யிடம் பேசுவது இல்லை.. அவர் படத்தை பார்ப்பதும் இல்லை : பிரபல வில்லன் நடிகர் ஓபன் டாக்!

நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…

12 hours ago

This website uses cookies.