இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மாயா S கிருஷ்ணன் என்ற போல்டான நடிகை போட்டியாளராக கலந்துக்கொண்டிருக்கிறார். அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள அவர் யார் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
நிறைய குறும்படங்களில் தனது போல்டான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான “வானவில் வாழ்க்கை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு ரஜினியின் 2.o திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ஒரு விலை மாதுவாக நடித்தார். அந்த ரோல் ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தது.
தற்போது தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்திலும் இவர் ஒரு நல்ல கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். மேலும், விரைவில் வெளியாக உள்ள நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். இந்நிலையில், இவர் பிக்பாஸில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தன் நடவடிக்கைகளின் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆவார் என எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில், சக நடிகையான அனன்யா ராம் பிரசாத் என்பவர் மாயகிருஷ்ணன் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்ததை தற்போது நெட்டிசன்கள் கண்டுபிடித்து விமர்சகர்கள் மாயாவின் பழைய வழக்கையை மீண்டும் கிளப்பியுள்ளார்கள்.
அதாவது, அனன்யா 2016 ஆம் ஆண்டு நடிகை மாயா கிருஷ்ணனை சந்தித்ததாகவும், அப்போதுதான் படித்து முடித்து இருந்ததாகவும், அந்த சமயத்தில் மாயா சினிமாவில் பிரபலமாக இருந்ததால், ரிகர்சல் சமயத்தில் அவர் என் மீது பாசம் காட்டி எனக்கு வழிகாட்டியாக இருந்து நிறைய அட்வைஸ் செய்தார்.
அதனால், அவரை எனக்கு அப்போது பிடித்திருந்தது. பிறகு இருவரும் அன்பாக ஆரம்பித்தோம். மாயா கிருஷ்ணன் தனியாக தான் வசித்து வந்தார். நானும் அவருடன் தங்க ஆரம்பித்தேன். ஒரே வீட்டில் தூங்கும்போது என்னுடன் அவர் தவறாக நடந்து கொண்டார். கண்ட இடங்களில் தொடுவது எனக்கு முத்தம் கொடுப்பது போன்று என்னிடம் தவறாக நடந்து கொண்டார். இதை நான் கண்டித்தேன். ஆனால், அவர் இதெல்லாம் சாதாரண விஷயம் என்று என்னிடம் கூறினார் என்று அனன்யா தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து மாயா கூறுகையில், அனன்யாக்கூறியது அத்தனைத்துமே, பொய் இதனை விசாரிக்கும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன். என் மீது அவர் வேண்டுமென்றே அவதூறு கிளப்புகிறார். அதனால், அவர் மீது வழக்கு தொடுத்திருக்கிறேன் என விளக்கமும் அளித்துவிட்டார். அதன் பிறகு அந்த விவகாரம் கொஞ்சம் ஆறி இருந்தது. தற்போது, மாயா பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கின்ற நிலையில் மாயாவின் பழைய விஷயங்களை மீண்டும் நெட்டிஷன்கள் கிளப்பி வருகின்றனர்.
முன்னதாக, மாயா பிக்பாஸ் வீட்டில் அட்டூழியம் தான் செய்து வருகிறார். எப்போது இவர் வெளியே வருவார் வச்சு செய்யலாம் என பல கூட்டம் காத்தது இருக்கிறது. இந்நிலையில் மாயா குறித்து பாடகி சுசித்திரா பல மர்ம தகவல்களை பகிர்ந்து உள்ளார். அதில் குறிப்பாக மாயா யாரை பார்த்தாலும் அவர்கள் மீது அதிகாரம் செலுத்த நினைப்பார். அதோடு 5 ரூ முதல் 50,000 என யாரை பார்த்தாலும் பணத்தை பிடுங்க நினைப்பார் என்ற தகவலை சுசித்திரா பகிர்ந்து உள்ளார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.