பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் தற்கொலைக்கு முயற்சித்தாக வெளியான தகவல் திரையுலகை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று முழுவதும் அவரது கணவர் சென்னையில் இருந்து போன் செய்த போது எடுக்காததால் சந்தேகமடைந்த அவர், குடியிருப்பு சங்கத்தின் மூலமாக தகவல் அனுப்பினார்.
அவர்கள் சென்று கதவை தட்டிய போது திறக்கப்படாததால், போலீசாருக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் மயங்கி கிடந்த கல்பனாவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டது மருத்துவர்கள் பரிசோதனையில் தெரிந்தது. தற்போது இவர், நலமுடன் உள்ளதாகவும், மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கல்பனா மகள் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது தாய் கல்பனா சிகிச்சை பெற்று வருவதை நேரில் பார்வையிட்டு பின்னர் செய்தியாளரிடம் பேசுகையில் எனது அம்மா தற்கொலை செய்து கொள்ளவில்லை.
மன அழுத்தம் காரணமாக தூக்க மாத்திரைகள் சற்று அதிக அளவில் எடுத்துக்கொண்டுள்ளார். தயவுசெய்து இந்த தகவலை மாற்றாதீர்கள் மற்றும் தவறாக சித்தரிக்க வேண்டாம். மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைளை சாப்பிட்டுள்ளார். அது கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டது.
எங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எனது அம்மா நலமுடன் இருக்கிறார் விரைவில் வீட்டிற்கு திரும்புவார் என அவர் தெரிவித்தார்.
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த “வாரணம் ஆயிரம்” திரைப்படத்தை 90களில் பிறந்தவர்களால் மறக்கவே…
This website uses cookies.