அளவுக்கு அதிகமாக ஏறிய போதை.. -மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை..!
Author: Vignesh16 June 2023, 5:30 pm
இந்தி சினிமா மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. பாலிவுட் சினிமாவில் இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இவர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படம் தமிழ் மக்களிடமும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.

நடிகர் ரஜினிக்கு ஜோடியாக அனிமேஷன் படமான கோச்சடையான் படத்திலும் நடித்திருந்தார். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது, திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் தீபிகா படுகோன் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படத்தில் படுமோசமான கவர்ச்சி காட்சிகளில் நடித்திருந்தார்.

மேலும், ஷாருக்கான் அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, தீபிகா படுகோன் அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் மற்றும் மது அருந்தியதால், தலைக்கேறிய போதையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாலிவுட் சினிமா விமர்சகர் உமர்சந்து ஒரு பதிவினை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.