வயது மூப்பு காரணமாக பிரபல நடிகர் டெல்லி கணேஷ் நேற்று முன்தினம் இரவு தூங்கும் போதே உயிரிழந்தார். அவருக்கு வயது 81.
சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் இவர் இறந்தது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருமாவளவன், ஜெயக்குமார் உள்ளிட்ட தலைவர்களும், நடிகர்கள் சிவக்குமார், சத்யராஜ், செந்தில், சார்லி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் டெல்லி கணேஷ் உடலுக்கு விமானப்படை சார்பில் தேசத்தின் மூவர்ண கொடியை போர்த்தி மரியாதை செலுத்தினர்.
1964 முதல் 1976 வரை இந்திய விமானப்படையில் பணியாற்றிய டெல்லி கணேஷ் அதன் பிறகு திரைப் பயணத்தை துவங்கினார்.
சின்னத்திரையிலும் நடித்துள்ளார். சமார் 400 படங்களில் நடித்த அவர் சின்னத்திரையில் முத்திரை பதித்தார். டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வந்தார்.
டெல்லி கணேஷ் உடலுக்கு விமானப்படை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது ஏன் என்றால், அவர் 10 வருடமாக விமானப்படையில் பணியாற்றியதின் அப்படையில் மரியாதை செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் ராமாபுரத்தில் இருந்து நெசப்பாக்கம் மின் மயானம் வரை ஊர்வலமாக எடுத்து சென்று டெல்லி கணேஷ் உடல் தகனம் செய்யப்பட்டது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.