வயது மூப்பு காரணமாக பிரபல நடிகர் டெல்லி கணேஷ் நேற்று முன்தினம் இரவு தூங்கும் போதே உயிரிழந்தார். அவருக்கு வயது 81.
சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் இவர் இறந்தது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திரைத்துறையினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருமாவளவன், ஜெயக்குமார் உள்ளிட்ட தலைவர்களும், நடிகர்கள் சிவக்குமார், சத்யராஜ், செந்தில், சார்லி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் டெல்லி கணேஷ் உடலுக்கு விமானப்படை சார்பில் தேசத்தின் மூவர்ண கொடியை போர்த்தி மரியாதை செலுத்தினர்.
1964 முதல் 1976 வரை இந்திய விமானப்படையில் பணியாற்றிய டெல்லி கணேஷ் அதன் பிறகு திரைப் பயணத்தை துவங்கினார்.
சின்னத்திரையிலும் நடித்துள்ளார். சமார் 400 படங்களில் நடித்த அவர் சின்னத்திரையில் முத்திரை பதித்தார். டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வந்தார்.
டெல்லி கணேஷ் உடலுக்கு விமானப்படை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது ஏன் என்றால், அவர் 10 வருடமாக விமானப்படையில் பணியாற்றியதின் அப்படையில் மரியாதை செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் ராமாபுரத்தில் இருந்து நெசப்பாக்கம் மின் மயானம் வரை ஊர்வலமாக எடுத்து சென்று டெல்லி கணேஷ் உடல் தகனம் செய்யப்பட்டது.
சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
This website uses cookies.