ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும் ஏற்றார் போல் தனது பாடல்களை அப்டேட் செய்துகொண்டே வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். “மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே”, “வாட்டர் பாக்கெட்”, “ஜிங்குச்சா” போன்ற பாடல்களின் மூலம் Gen Z தலைமுறையையும் தனது இசையால் குதூகலப்படுத்தி வருகிறார் ரஹ்மான். இந்த நிலையில்தான் ஏ.ஆர்.ரஹ்மான் மீது ஒரு காப்புரிமை வழக்கு தற்போது பாய்ந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் நல்ல வசூலை குவித்திருந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு இதன் இரண்டாம் பாகம் வெளிவந்தது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “வீரா ராஜ வீரா” என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இந்த பாடலால்தான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது இப்பாடல் சிவா ஸ்துதி என்ற பாடலை மையமாக வைத்து உருவாகியுள்ளதாகவும் இதனை தங்களது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியுள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர்களால் ஏ.ஆர்.ரஹ்மான் மீது டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ.2 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கும்படி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…
களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…
நடிகர் பாக்யராஜ் முன்னணி இயக்குநர், நடிகராக 80 மற்றும் 90களில் திகழ்ந்தார். இவர் உடன் நடித்த நடிகை பூர்ணிமா ஜெயராமை…
This website uses cookies.