சினிமா / TV

ரஜினி கொடுத்த டோஸ்.. மனம் மாறிய தனுஷ் : தீபாவளியன்று போயஸ் கார்டனில் நடந்தது என்ன?!!

நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த சில வருடங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்வதாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து போயஸ் கார்டனில் தனி வீடு கட்டி குடிபுகுந்தார் தனுஷ். என்னதான் தலைவர் ரசிகன் என சொல்லும் தனுஷ், தலைவருக்கு எதிராகவே செயல்பட்டு வருவதாக பேசப்பட்டது.

மகளின் பிரிவை நினைத்து ஒரு பக்கம் வருந்திய ரஜினிகாந்த், தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் கூலி படப்பிடிப்பு முடித்துக் கொண்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி, தற்போது வரை ஓய்வெடுத்து வருகிறார்.

ஒரு பக்கம் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு கோட்டில் விசாரணைக்கு வந்த நிலையில் இருவரும் நேரில் ஆஜராகவில்லை. கிட்டதட்ட 3 முறை கோர்ட்டில் ஆஜராகததால் இருவரும் சேர்ந்து வாழ விரும்புகின்றனரோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது.

இந்த நிலையில் இது உறுதி செய்யும் விதமாக போயஸ் கார்டனில் ரஜினி இல்லத்தில் ரகசிய மீட்டிங் நடந்துள்ளது. இதில் ரஜினியிடம் பேசிய தனுஷ், பரஸ்பரமாக இருவரும் சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் உலா வருகின்றன.

இதையும் படியுங்க: தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை? ராமதாஸ் பதிவால் பரபரப்பு!

தனுஷிடம் மனம் விட்டு ரஜினிகாந்த் பேசியதால் இந்த மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போயஸ் கார்டனில் தனுஷ் – ஐஸ்வர்யா இணைந்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் ரஜினி மட்டுமல்ல, அவரது ரசிகர்களும் உற்சாக மகிழ்ச்சியுள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை…ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…

11 minutes ago

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

15 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

16 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

16 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

16 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

16 hours ago

This website uses cookies.