நல்ல நண்பர்களாக வலம் வந்த தமிழ் சினிமா நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே தற்போது கோர்ட்டில் கேஸ் நடத்தும் அளவுக்கு சென்றுள்ளது.
நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிக பிரம்மாண்டமாக நடந்து. குறிப்பாக பிரபலங்கள் மட்டும் பங்கேற்ற இந்த திருமண விழா வெளியுலகுக்கு தெரியாத வகையில் பல கட்டுப்பாடுகளுடன் நடந்தது.
இதையும் படியுங்க : ‘டிராகன்’ பட நடிகை போனில் அந்த மாதிரி மீம்..ஷாக் ஆன பிரதீப் ..நெட்டிசன்கள் விமர்சனம்.!
பின்னர் இதை வெளியுலகுக்கு கொண்டு வர நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் நயன்தாரா கைக்கோர்த்து விலை பேசி வீடியோவை வெளியிட முயற்சி செய்தார். ஆனால் சிக்கலே அங்கு தான் ஆரம்பித்தது. நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போதுதான் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. அப்போது படப்பிடிப்பில் அவர்கள் ஜோடியாக சுற்றிய வீடியோ மற்றும் அப்படப்பாடலை தனுஷிடம் கேட்காமல் திருமண வீடியோவில் இணைத்தது பெரும் பஞ்சாயத்தாக மாறியது.
இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வரும் நிலையில், நஷ்டஈடு கேட்டு தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் தனுஷ் நயன்தாராவை புகழ்ந்து பேசியது குறித்து செல்வராகவன் தற்போது கூறியுள்ளார்.
ஐயா படத்தில் நடித்த போது நயன்தாரா பெரிய நடிகையாக வலம் வருவார் என அன்றே நான் கணித்து என் தம்பி தனுஷிடம் கூறினேன். ஆனால் அவன் அப்போது அதை நம்பவில்லை.
பின்னர் யாரடி நீ மோகினி படத்தில் நடித்த போதுதான் நயன்தாரா சிறந்த நடிகை என தனுஷ் புகழ்ந்துள்ளார். என்னிடம் அவர்(நயன்தாரா) நடிப்பை பற்றி பேசினார் என செல்வராகவன் கூறியுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.