தனுஷிடம் அது இருக்கிறது… செல்வராகவனிடம் இல்லை – நெருங்கி பழகியதை ஒப்புக்கொண்ட சோனியா அகர்வால்!

தமிழ் சினிமாவில் 2000ம் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை சோனியா அகர்வால். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவர் நடித்தது மொத்தம் தமிழ் திரைப்படத்தில் தான். கோலிவுட் சினிமாவில் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகன் தான். அந்த படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தால் காதலிக்க துவங்கினர் பின்னர் 2006ம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டனர்.

பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். மேலும் இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன. சமீபத்தில் பிரபுதேவாவின் பாஹிரா என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இவர்களின் விவாகரத்து குறித்து பல வதந்திகள் வெளியாகியது. சோனியா அகர்வாலுக்கு திருமணத்திற்கு முன்பே குடிப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் இருந்துள்ளது என்றும் இது தெரிந்தே செல்வராகவன் திருமணம் செய்துக்கொண்டார்.

ஆனால், திருமணத்திற்கு பிறகும் சோனியா அகர்வால் இது போன்று நடந்து கொண்டதால் அது தன் குடும்பத்திற்கு செட் ஆகாது என கஸ்தூரிராஜா கண்டித்தார் என்றும் சோனியா அகர்வால் சில ஆண் நண்பர்களுடன் பழக்கம் வைத்திருந்ததாகவும் அதனால் குடும்பமே சேர்ந்து அவரை ஒதுக்கி விவாகரத்து செய்துவிட்டார்கள் என்றும் செய்திககள் வெளியானது.

பின்னர் விவாகரத்து குறித்து பேசிய சோனியா அகர்வால், திருமணத்திற்கு பின்னர் தான் நடிக்கவே கூடாது என செல்வராகவனின் ஒட்டுமொத்த குடும்பமும் எதிர்த்ததாகவும் அதனால் அவர் ஒரு வருடம் நடிப்பிற்கு கேப் விட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் நடிகை குஷ்பு மூலம் சீரியல் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் அதில் குடும்பத்தினர் எதிர்ப்புகளை மீறி நடித்ததால் தான் அவர்கள் விவாகரத்து செய்ய சொல்லி டார்ச்சர் செய்ததாக கூறி பகீர் கிளப்பினார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சோனியா அகர்வால், நான் காதல் கொண்டேன் படத்திற்கு நடிக்க வந்தபோது என்னுடைய அம்மாவிற்கு தனுஷின் தோற்றத்தை பார்த்து இவரெல்லாம் ஹீரோவா? என அவரை குறை சொல்லிக்கொண்டே இருந்தார்.

பின்னர் நான் என் அம்மாவிற்கு, செல்வராகவன் சார் மிகச்சிறந்த இயக்குனர்… அவர் தன் படங்களுக்கு கச்சிதமான நடிகர்களை தான் தேர்வு செய்வார். அப்படித்தான் தனுஷின் ரோல் படத்தில் இருக்கும் என எடுத்துக்கூறினேன் பின்னர் தான் என் அம்மா அமைதியானார்.

உண்மையில் சொல்லப்போனால் செல்வராகவனை விட தனுஷ் ரொம்ப நல்லவர். படப்பிடிப்பின் போது காட்சிகள் சரியாக வரவில்லை என்றால் அல்லது நாங்கள் சரியாக நடிக்கவில்லை என்றால் செல்வராகவன் மோசமாக எங்களை திட்டுவார். காட்சிகள் முடிந்தபிறகு கூட சமாதானம் செய்யமாட்டார். தனுஷ் வந்து தான் அதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க என சொல்லுவார். அந்த குணம் தனுஷிடம் இருக்கிறது என சோனியா அகர்வால் கூறினார்.

Ramya Shree

Recent Posts

வீட்டு வாசலில் காத்திருந்த இஸ்லாமியர் சுட்டுக்கொலை ; பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

இஸ்லாமியர் ஒருவர் அதிகாலையில் வீட்டு வாசலில் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலிகரின் ரோராவரில் உள்ள…

59 minutes ago

அட்டையை பார்த்து அரசியல் செய்பவர் அண்ணாமலை… காங்., எம்பி தாக்கு!

மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து மதுரை மாநகர் காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு சார்பில் அனைத்து…

2 hours ago

கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…

19 hours ago

வெறுப்பேற்ற கள்ளக்காதல் நாடகம்.. கணவரின் உயிரைப் பறிந்த CRPF வீரர்!

அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…

20 hours ago

சுற்றி வளைக்கும் பாஜக.. திக்குமுக்காடும் திமுக.. பட்ஜெட் மீது கடும் தாக்கு!

டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…

21 hours ago

முதலில் ஒருவர் அறிக்கை விடுகிறார்.. அடுத்து ED சொல்கிறது.. செந்தில் பாலாஜி அட்டாக் பேச்சு!

ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…

22 hours ago

This website uses cookies.