தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நடிகர் தனுஷ்யை தன்னுடைய மகன் என்று மதுரையைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் உரிமை கொண்டாடி மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
ஆனால் நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கை ரத்து செய்ய கோரி, மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், கதிரேசன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருப்பதாக வழக்கறிஞர் தற்போது தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அவரின் DNA டெஸ்ட் எடுத்து அதை பராமரிக்க வேண்டும் என்று மதுரை அரசு மருத்துவ கல்லூரி Din இடம் மனு ஒன்றை வழங்கி உள்ளனர். மேலும் அதே டீன் தனுஷை பரிசோதித்த போது அவர் தனது அங்க அடையாளங்களை லேசர் மூலம் அழித்து உள்ளார் என்று டீன் ரிப்போர்ட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஏன் தனுஷ் தனது அங்க அடையாளங்களை அழிக்க வேண்டும் எனவும், அதே மாதிரி அவரின் காலேஜ் மற்றும் பள்ளி சான்றிதழ்கள் போலியான ஆவணங்களை நீதிமன்றத்தில் கொடுத்ததாகவும், இதை வைத்து பார்க்கும் பொழுது அவர் நிச்சயமாக கதிரேசன் – மீனாட்சி மகன் தான் என்று உறுதியாக தெரிகிறது என தெரிவித்துள்ளார்.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.