தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் பெயரில் வரும் காஸ்டிங் அழைப்புகள் முற்றிலும் போலியானவை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், உண்டர்பார் பிலிம்ஸ் (Wunderbar Films) மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார். இந்தத் தயாரிப்பு நிறுவனத்தை தனுஷின் நண்பர் ஷ்ரேயஸ் என்பவர் கவனித்து வருகிறார். இந்த நிலையில், முக்கிய அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக, ஒரு செல்போன் எண்ணுடன் ஷ்ரேயஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “இது எங்கள் அழைப்பு எண் அல்ல. வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் என் பெயரில் வரும் காஸ்டிங் அழைப்புகள் முற்றிலும் போலியானவை. என் புகைப்படம் தவறுதலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, கவனமாக இருக்கவும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Wunderbar Films Movies: ’3’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளரான தனுஷ், எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, மாரி, விசாரணை, வடசென்னை, இட்லி கடை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய 15க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளது. இந்தப் படங்கள் பெரும்பாலும் லாபத்தையேக் கொடுத்துள்ளன.
மேலும், சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன் நிறுவனமும், காஸ்டிங் ஏஜெண்ட்களை நியமிக்கவில்லை என எச்சரிக்கைப் பதிவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, தற்போது சமூக வலைத்தளங்களில் வரும் சினிமா வாய்ப்புகளை பலமுறை உறுதிப்படுத்திய பிறகு தங்களது தகவல்களை அனுப்ப வேண்டும்.
இதையும் படிங்க: எல்லாம் உங்களுக்காக தான்… இணையத்தில் வைரலாகும் SK-வின் வெறித்தனமான வீடியோ.!
காஸ்டிங் ஏஜெண்ட்ஸ்: சினிமாவில் காஸ்டிங் ஏஜெண்ட்ஸ் என்பது, ஒரு படத்திற்குத் தேவையான துணை நடிகர், நடிகைகள், குழுக்கள், உள்ளூர் மக்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநரிடம் உறுதிப்படுத்தி, அதற்கென ஊதியத்தைப் பெறும் ஒரு குழு வேலையாகும்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…
This website uses cookies.