பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் டாஸ்கின் போது, நடிகர் தினேஷ் தனது மனைவி ரக்ஷிதாவை பற்றி பேசி இருந்தார். என் திருமண வாழ்க்கையில் ஒரு பெரிய பிரேக் உருவானது. என் மனைவியும் நானும் ஒரு சின்ன சண்டை போட்டு ஈகோ காரணமாக அது பெரிய விஸ்வரூபமாக எடுத்தது. அதை பெரியவர்களால் தீர்த்து வைக்க முடியாமல் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டது.
தற்போது வரை, இருவரும் பிரிந்து தான் இருக்கிறோம். மேலும், அதிலிருந்து மீண்டு வர முடியாமல் இன்னும் தவித்து வருகிறேன். அந்த பிரிவுக்குப் பிறகு ஒரு வருடமாக என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். ரக்ஷிதாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் அதை எல்லாம் கடந்து தான் வந்திருக்கிறார்கள். மீண்டும் சேர பலமுறை முயற்சி செய்தேன்.
அதில், frustrate ஆகி நின்று விட்டேன். தற்போது, வரும் வேலைகளை எடுத்து செய்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கை எப்படி போகிறதோ அப்படி போய் கொண்டு இருக்கிறது. இருவருமே ஆர்டிஸ்ட் என்பதால் எனக்கு அவர் அடையாளம் அவருக்கு நான் அடையாளம். ஆனால் தற்போது அதுவே உடைந்து விட்டது. இந்த விஷயத்தில், ரிசல்ட் இன்னும் கிடைக்கவில்லை. கடவுள் அருளால் எல்லாம் நல்லபடி நடக்கும் என நினைக்கிறேன் என்று தினேஷ் உருக்கமாக பேசி இருந்தார்.
இந்நிலையில், பிக் பாஸில் இருந் துவெளியேறிய தினேஷ் ஒரு பேட்டியில், நான் பிக் பாஸ் உள்ளே போகும்போது எப்படியாவது என்னுடைய வாழ்க்கை சரியாக விடும் என்று நினைத்துதான் உள்ளே சென்றேன். ஆனால், வெளியே வந்து பார்த்ததில் எந்த இடத்தில் இருந்ததோ அதே மாதிரி தான் இருக்கிறது. இனி ரக்ஷிதா மாறுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு சுவற்றை எழுப்பி அந்த சுவற்றுக்குள்ளேயே இருந்து கொண்டிருக்கிறார். இதற்கு, மேலே இனி நான் அடுத்த வாழ்க்கையை நோக்கி பயணத்தை தொடர போகிறேன் என்று தினேஷ் பேசியுள்ளார்.
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
This website uses cookies.