தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், தனது கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.
தற்போது, எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது அஜித் பற்றி சில விஷயங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அப்படி நான் கடவுள் படத்தில் இயக்குனர் பாலா கதையை கூறும் போது அஜித்தை அடித்த சம்பவம் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து சினிமா விமர்சகர் சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் இருக்கிற Palmgrove ஹோட்டலில் நான் கடவுள் கதையை கூற பாலா அஜித்தை அழைத்திருக்கிறார். அங்கு பாலாவுடன் மூன்று பேர் இருந்த நிலையில், அஜித் கதையை ஒரு லைன் அப் கேட்டிருக்கிறார். அகோரிகள் கதை என்று பாலா, தன் பாணியில் எடக்குமுடக்காக கூறியிருக்கிறார். அஜித் முடியில் ஆரம்பித்து பேசிய நிலையில், அஜித் அப்செட்டாகி வேண்டாம் என்று எழுந்திருக்கும் போது பின்னால் இருந்தவர் அஜித்தை முதுகில் தட்டி உட்கார வைத்திருக்கிறார்.
நீ என்ன பெரிய ஹீரோவா என்று அப்போது கேட்கவே, அஜித் வெளியில் வந்து 20 நாட்கள் யாரையும் பார்க்காமல் அவமானத்தில் இருந்துள்ளார். இதுகுறித்து பாலா எனக்கு ஒன்னும் தெரியாது, எனக்கு தெரிந்த அபிமானி ஒரு சின்ன தட்டு தட்டினார் என்று கூறியதாக விமர்சகர் செய்யார் பாலா கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.