வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் ஆக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவி. இந்நிலையில், கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில், சமூக வலைதளங்களில் மனிதர்களின் நடவடிக்கைகளை பார்த்து வியப்படைவதாகவும், அனைவரும் கொஞ்சம் பைத்தியமாகிவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த சிலர் அவருக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், சில அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளரும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் மாங்கை என்ற திரைப்படம் எடுத்தது தெரியவந்துள்ளது.
இந்த படத்தில் பாடல் ஒன்றை கிருத்திகா உதயநிதி வெளியிட்டிருந்த நிலையில், கிருத்திகாவை போதை பொருள் கடத்தல் தொடர்பான விஷயங்களில் தொடர்புடைய சிலர் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதற்காக கிருத்திகா உதயநிதி அந்த பதிவை வெளியிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.