மாரி செல்வராஜோட இன்னொரு முகத்தை பார்த்து பயந்துட்டேன் : பரியேறும் பெருமாள் சூட்டிங்கில் நடந்த கொடூர காட்சி!!

இயக்குனர் மாரி செய்வராஜ் பற்றி நடிகர் ஜி.மாரிமுத்து ஒரு பேட்டியில் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்க்கு முன்னர் மாரி செய்வராஜ் இயக்குனர் ராமினுடைய துணை இயக்குனராக பணியாற்றி வந்தார். அதன் பின்பு கடந்த ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “கர்ணன்” திரைப்படத்தை இயக்கினார். இப்படமானது நல்ல வெற்றியை படக்குழுவிற்கு தந்தது. இந்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார் மேலும் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் பிரொடெக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. உதயநிதி நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் எடுக்கும் அடுத்தப்படத்தில் நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம் நடிக்கவுள்ள திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார் . இப்படத்தின் படப்பிடிப்பானது அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் 2018ல் வெளிவந்த “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். இப்படத்தின் கதிர், ஆனந்தி, யோகி பாபு, விஜேஷ், ஜி மாரிமுத்து, கராத்தே வெங்கடேசன், சண்முக ராஜன், பூ ராம் ஏன பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முதல் தலைமுறையாக கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறும் இளைஞன் தன்னுடைய வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு இப்படமானது உருவாக்கப்பட்டது.

மேலும் இப்படமானது சிறந்த படத்திற்கான விருதுகளையும் பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தில் நடித்திருந்த ஜி.மாரிமுத்து பிரபல பத்திரிக்கை நிறுவனத்திற்கு பேட்டியளித்திருந்தார். இந்த பேட்டியில் “பரியேறும் பெருமாள்” படத்தில் கதாநாயகனான கதிரை அழைத்து அடித்து அவமானப்படும் ஒரு காட்சிக்கு எப்படி மனரீதியாக தயாராகியிருந்தீர்கள் என்று செய்தியாளர் நடிகர் ஜி.மாரிமுத்துவை கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த அவர் “அந்த காட்சியை எடுக்கும் போது மட்டும் இயக்குனர் ஒரு மிருகம் போல இருந்தார். தூத்துக்குடிக்கு திருநெல்வேலிக்கு இடையில் கருங்குளம் என்று ஊரில் தான் அந்த காட்சியானது எடுக்கப்பட்டது. இக்கட்சியானது விடிய விடிய எடுக்கப்பட்டது. இந்த காட்சியில் கதிர் தன்னுடைய காதலி வீட்டில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ள பக்கத்துவீட்டாரிடம் சட்டையை வாங்கி போட்டுகொண்டு ஒரு பரிசுசூடன் வருவார். ஆனால் காதலி வீட்டில் இருப்பவர்கள் இவரை அடித்து அவமானப்படுத்தி முகத்தில் சிறுநீர் கழுத்து அசிங்கப்படுத்துவது தான் அந்த காட்சி என்று எங்களிடம் முதலிலேயே கூறிவிட்டார் இயக்குனர்.

ஆனால் அந்த காட்சி எடுக்கும் போது அனைவரையுமே இயக்குனர் மாரி செல்வராஜ் திட்டி கொண்டு கோவமாகவே இருந்தார். நானும் அவரிடம் சென்று என்ன? சார் என்ன ஆச்சு? ஒரே கோவமாகவே இருக்கிறீர்கள் என்று கேட்டேன் அதற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. அவர் கூறியதாவது `இல்லை சார் இந்த காட்சி என்னுடைய உண்மையான வாழ்கையிலேயே நடந்திருக்கிறது என்று கூறினார். அப்போது நான் புரிந்து கொண்டேன் இவரும் இப்படத்தில் வரும் கதிரை போல காதலி வீட்டிற்கு சென்று அவமானப்படுத்தப்பட்டுள்ளார் என்று. எனவே நானும் இந்த காட்சியில் நன்றாக நடிக்க வேண்டும் என்று நடித்திருந்தேன் என்று பல சுவாரசியமான நிகழ்விகளை அதே பேட்டியில் பகிர்ந்து கொண்டார் நடிகர் ஜி. மாரிமுத்து.

Poorni

Recent Posts

டீக்கடைக்குள் புகுந்த லாரி… விபத்தில் சிக்கிய குழந்தை : 5 பேர் படுகாயங்களுடன் அனுமதி!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…

12 minutes ago

17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!

நடிகை அமலாபால் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய்,…

19 minutes ago

அந்த கலவரத்திற்கு மோடிதான் பொறுப்பு- சர்ச்சையை கிளப்பி வரும் ஆமிர்கான் பேட்டி…

டாப் நடிகர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். இவர் தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் உதவி இயக்குனராகவும் தனது…

20 minutes ago

பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…

எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…

1 hour ago

கிரிக்கெட் விளையாடும் போது நொடியில் உயிரிழந்த கல்லூரி மாணவர் : ஷாக் வீடியோ!

தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…

1 hour ago

தர்ஷன் கைது: எனக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா?- வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய சனம்!

பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…

2 hours ago

This website uses cookies.