பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடி எடுத்து வைத்தவர் மோகன். இதனை தொடர்ந்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு, திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் ஜாதி ரீதியாக நிறைய கருத்துகள் பேசப்பட்டிருந்தது. இப்படம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இருப்பினும், மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனையடுத்து, இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது மோகன் ஜி இயக்கத்தில், செல்வராகவன் கதாநாயகனாக உருவாகி வரும் திரைப்படம் பகாசூரன்.
ஜி எம் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு பகாசுரன் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துவிட்டது. மேலும், செப்டம்பர் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் மோகன் அவர்கள் பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது.
அதாவது, தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டு இருக்கும் சம்பவம் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தான்.
கடலூர் – பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி, கடந்த 13ம் தேதி மாணவி தான் படித்து வந்த பள்ளி விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி 5வது நாளாக மாணவியின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் மோகன் அவருடைய டுவிட்டரில் கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் முதல் முறையாக நடந்த சம்பவம் அல்ல. இன்னும் பல சம்பவங்கள் இதுபோல நடந்துள்ளது. மூன்று மாதம் காத்திருங்கள் என்று தன்னுடைய படத்தினுடைய பகாசூரன் டைட்டிலை பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்த மாதிரி நேரத்தில் கூட உங்களுடைய படத்தின் புரமோஷன் பண்றீங்களா? உங்களுக்கே நியாயமா? என்றெல்லாம் ரசிகர்கள் திட்டி கொண்டு வருகின்றனர். இதனால், உடனே இயக்குனர் மோகன் பதிவை நீக்கி இருக்கிறார்.
தற்போதெல்லாம் ஒரு படம் ஹிட் ஆனாலே, நடிகர் நடிகைகள் கொடுக்கும் பில்டப்புக்கு எல்லையே இல்லை. நடிகைகள் தயாரிப்பாளர்களிடம் கறார் காட்டுவதும்,…
சென்னையில், இன்று (மார்ச் 13) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 55 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 120…
ரவிமோகன் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், அப்படத்தில் யோகி பாபு மெயின் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
தமிழகத்திலும் மதுபான ஊழலில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் திமுகவுக்கு கைமாறியுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.…
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
This website uses cookies.