விக்ரமுக்கு நடிப்பே வராது… ரஜினி – கமலை காப்பியடித்து தான் – பிரபல இயக்குனர் பளீச்!

படத்திற்கு படம் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகர் என பெயரெடுத்தவர் நடிகர் விக்ரம். இவர் தமிழில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். என் காதல் கண்மணி படத்தின் மூலம் 1990ல் அறிமுகமானார்.

அதன் பின்னர் தொடர்ந்து பல தோல்வி படங்களில் நடித்து துவண்டுபோன விக்ரமுக்கு சேது படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பின்னர் காசி, ஜெமினி, தூள் , பிதாமகன் , அந்நியன் , தெய்வத்திருமகள் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

படத்திற்கு படம் தனது முழு உழைப்பை போட்டு திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அந்த படத்திற்காக தனது இயக்குனர் எப்படி கேட்கிறாரோ அப்படி உடலை வருத்தி திறமையான நடிகராக பார்க்கப்படுபவர் விக்ரம். திரைத்துறையில் போட்டிகள் பொறாமைகள் இன்றி ஜீரோ ஹேட்டர்ஸ் என்ற பெயரெடுத்திருக்கிறார்.

அப்படித்தான் இராவணன் படத்தில் அவரது கேரக்டர் ரசிகர்களை வியக்கவைத்தது. அப்படத்தில் ஐஸ்வர்யா உடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க விக்ரம் முதலில் மிகவும் தயங்கினாராம். அதை புரிந்துக்கொண்ட ஐஸ்வர்யா ராய். இங்க கூச்சப்படுவதற்கு ஒண்ணுமே இல்லை. நான் ஒரு நடிகை அவ்வளவு தான். நாம் நடிக்கும் படத்தின் காட்சிக்கு இப்படி பண்ணவேண்டியிருக்கு என பேசி தைரியம் கொடுத்தாராம். அதன் பின்னர் அவர்கள் கெமிஸ்ட்ரி அடிதூள் கிளப்பியது.

ஆனால், பிரசாந்தின் அப்பா மிகப்பெரிய தயாரிப்பாளார் என்பதால் அவர் தன் மகனை சீக்ரத்திலே வளர்த்துவிட்டார். அந்த சமயத்தில் வாய்ப்பில்லாமல் இருந்த விக்ரம் பிரசாந்த் வீட்டு கதவை தட்டி வாய்ப்பு கேட்டாராம். ஆனால் அவரது குடும்பமே விக்ரமை உதாசீனப்படுத்திவிட்டார்களாம். தற்போது விக்ரம் சிறந்த நடிகர், டெடிகேஷனான நடிகர் என்றெல்லாம் ரசிகர்கள் புகழாரம் சூட்டி வரும் நிலையில் பிரபல இயக்குனரும் தேவயானியின் கணவருமான ராஜகுமாரன், விக்ரமின் நடிப்பு குறித்து விமர்சித்துள்ளார்.

அதாவது நடிகர் விக்ரம் வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்தை நான் இயக்கினேன். அந்த படம் ரசிகர்களின் இல்லம் வரை சேர்த்து ஹிட் அடித்தது. ஆனால், வெளியுலகத்திற்கு தெரியாத விஷயம் ஒன்றை சொல்கிறேன். அந்த படத்தில் விக்ரமுக்கு நடிப்பு சொல்லிக்கொடுக்க நான் படாத பாடு பட்டேன். விக்ரம் ஒரு நல்ல நடிகர் என்று சொல்வதை நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். கை, கால் உடைத்துக் கொண்டு கண்ணை ஒரு மாதிரியாக நடிப்பது நடிப்பு அல்ல. நடிப்பு என்றால் என்ன என்றே தெரியாதவர் அவர். ரஜினி, கமல் மாதிரி மிமிக்ரி நடிப்பை தான் நடிப்பார் என்று இயக்குனர் ராஜகுமாரன் கூறி ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!

நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…

5 hours ago

ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…

வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…

6 hours ago

கோவில் திருவிழாவில் பரபரப்பு… 6 மாத குழந்தையுடன் குண்டத்தில் இறங்கிய போது தவறி விழுந்த பக்தர்..(வீடியோ)!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…

7 hours ago

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…

7 hours ago

டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…

எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

7 hours ago

This website uses cookies.