இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.
அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடிக்கும் திரைப்படம் விருமன். இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். நடிகை ஜோதிகாவும் சூர்யா 2D புரோடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்தது.
இந்த திரைப்படத்தில் அதிதி சங்கர் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால’ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதிதி ஷங்கர் தற்போது அவ்வப்போது, ஹாட் போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றியும் வருகிறார்.
இந்நிலையில், தன் குடும்ப வாழ்க்கையில் இயக்குனர் சங்கர் தன்னுடைய இரு மகள்களால் நிம்மதி இல்லாமல் இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கருக்கு சில ஆண்டுகளுக்கு முன் தன்னைவிட பணக்கார குடும்பத்தில் மகளை திருமணம் செய்து வைத்தாராம் சங்கர்.
இதனிடையே, கிரிக்கெட் வீரர் ரோகித் என்பவரை திருமணம் செய்து வைத்து அவர் மகள் நன்றாக இருப்பாள் என்று நினைத்து பார்த்த சில மாதங்களில் அவரை பிரிந்துவிட்டார். இவர்களின் விவாகரத்து வழக்கு தற்போது நடந்து வருகிறதாம்.
அதேபோல், இரண்டாம் மகள் அதிதி டாக்டர் பட்டம் முடித்த பின் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அப்பாவிடம் அடம் பிடித்து விருமன் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாவீரன் படத்தில் தற்போது நடித்து உள்ளார். ஆனால், ஒப்பந்தம் ஆனதே சங்கருக்கு தெரியாது என்றும், சினிமாவே வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் அப்பா பேச்சை கேட்காமல் தனது முடிவை எடுத்து வருகிறாராம் அதிதி. இப்படி இருமகள்களை நினைத்து நிம்மதி இல்லாமல் தவித்து சினிமாவில் நாட்டம் இல்லாமல் இருந்து வருகிறாராம் ஷங்கர்.
மேலும், நடிச்சது போதும் திருமணம் செய்து கொள் என்று சங்கர் கூறியும் பேச்சை கேட்காமல் நடிக்கத்தான் போகிறேன் என்று ஒற்றைக்காலில் அதிதி இருந்து வருகிறார். இப்படி இரு மகள்களும் தன் பேச்சை கேட்காததால் இருவரை பற்றியும் கவலைப்படாமல் படங்களை ரிலீஸ் செய்ய மும்முரமாக இயக்குனர் சங்கர் வேலை பார்த்து வருகிறாராம்.
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
This website uses cookies.