இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இவரது படங்களில் நடிக்கும் நடிகர்கள் மிகப்பெரிய உச்சத்தை தொட்டுவிடுவார்கள். அந்தவகையில் 5 டாப் ஹீரோக்களுக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார் ஷங்கர். அது யார் யார் என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் பிரபு தேவா:
நடன இயக்குனராக தனது வேலையை செய்துவந்த பிரபு தேவா மிகப்பெரிய ஹீரோ ஆனது ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த காதலன் படத்தில் தான். அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.
நடிகர் பிரசாந்த்:
தொடர்ந்து காதல் படங்களில் நடித்துவந்த பிரசாந்த்திற்கு மாபெரும் வெற்றி கொடுத்து டாப் ஹீரோவாக
மகுடம் சூட்டியது ஜீன்ஸ் திரைப்படம் தான்.
நடிகர் அர்ஜுன்:
நடிகர் அஜூனை மக்கள் ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவே பல காலம் ஆச்சு. எப்படியாவது மக்கள் மனதில் பிரபலம் ஆகவேண்டும் என்ற முனைப்புடன் ஓடிக்கொண்டிருந்த அர்ஜுனை வைத்து நாட்டுப்பற்று திரைப்படத்தை இயக்கி அவரது தலையெழுத்தையே மாற்றி எழுதியவர் ஷங்கர் தான். இன்று வரை முதல்வன் திரைப்படம் பலரது பேவரைட் படமாக உள்ளது.
நடிகர் விக்ரம்:
நடிகர் விக்ரமின் திறமைகளை வெளியுலகத்திற்கு கொண்டு வந்தவர் இயக்குனர் ஷங்கர் தான். இவர்கள் காம்போவில் வெளிவந்து உலக சாதனை பெற்ற திரைப்படம் ஐ. விக்ரம் மிகவும் திறமையான நடிகர் என இந்த படத்தின் மூலம் தான் பாராட்டப்பட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பெரும் புகழும் பெயரும் பெற்று தந்தது சந்திரமுகி. அந்த படத்திற்கு பிறகு பெரிதாக வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்த ரஜினிக்கு சிவாஜி படத்தை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தார் இயக்குனர் ஷங்கர்
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.