நெல்லையில், நாங்குநேரி பெருந்தெரு ஆதிராவிடர் குடியிருப்பிற்குள் ஆயுதங்களோடு புகுந்து பனிரெண்டாம் வகுப்பு மாணவன் சின்னதுரை மற்றும் அவனது தமக்கை சந்திராதேவி ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த தாக்குதலில் சின்னதுரை மற்றும் அவரது தங்கை சந்திராதேவி படுகாயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்4 நபர்கள், மற்றும் முன்னாள் மாணவர்கள்2 நபர்களையும் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற ஜாதி வன்மம் நடைபெறுவதற்கு ஜாதிய பிரச்சனையிலான படங்கள் எடுக்கப்படுவதே முக்கிய காரணம் என்றும், அழிந்துபோன ஜாதி பிரச்சனைகளை மாரி செல்வராஜ். மோகன் ஜி போன்ற இயக்குனர்கள் மீண்டும் தோண்டி எடுத்து வன்மத்தை தூண்டிவிடுகிறார்கள் என பலர் சமூகஅக்கறையாளர்கள் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரபல திரைப்பட இயக்குனரான தங்கர் பச்சான், நாங்குநேரி சம்பவம் உலக அவமானம். அதை என்னால் ட்விட்டரில் எழுத முடியவில்லை. யாரைப் பார்த்து எழுத? யாரைப் பார்த்து கேட்க? யார் இதற்கு காரணமோ அவர்களே அதற்கு பரிசு கொடுக்குறாங்க. ஒரு திரைப்படம் என்றால் இரு பிரிவினரை இணைக்கவேண்டும்., பிரித்து பகையை உண்டாக்க கூடாது. அப்படி எந்த ஒரு படமும் வெளியானதில்லை. ‘ஜாதி பெருமை, ஜாதி அடக்குமுறை குறையும் மாதிரி திரைப்படங்கள் எடுக்க வேண்டும். ஜாதிய வன்மத்தை வளர்த்துட்டு போகும் படங்கள் எடுக்கவே கூடாது. இனிமேலது இதுபோன்று படம் எடுப்பவர்கள் திருந்துங்கள். சமூகத்தை தவறான வழிகளில் கொண்டு செல்லாதீர்கள் என கொந்தளித்து பேசியிருந்தார்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.