தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். வித்தியாசமான கதைக்களத்துடன் இவர் இயக்கத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிலும் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி என்றாலே ரசிகர்களால் பெரும் வரவேற்பு பெறுவது வழக்கம்.
இவர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படமான பொல்லாதவன் திரைப்படம் இவருக்கு பெரும் வெற்றி படமாக அமைந்து, தமிழ் திரையுலகினரையும், ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. அதனைத் தொடர்ந்து, இவர் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் மற்றும் வடசென்னை போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் திரைப்படங்களாக அமைந்தது. தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை.
இயக்குனராக மட்டுமல்லாது தயாரிப்பாளர், ரைட்டர் உள்ளிட்ட பல திறமைகளை கொண்டுள்ளவர். தனுஷ், மஞ்சு வாரியார் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்பட கதை மட்டுமல்லாமல், இப்படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற எள்ளுவய பூக்களையே பாடல் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாடியதை கேட்டு தான் அப்பாடல் பயன்படுத்தப்பட்டாக தகவல் வெளியானது.
இதனை பேட்டியொன்றில் பகிர்ந்த சீமான், அந்தப் பாடலை பாடியும் காட்டினார். சீமான் பொய் கூறுவதாக ஒரு சிலர் சர்ச்சையாக்கினர். இது குறித்து பேட்டியொன்றில் வெற்றிமாறனிடம் கேட்டபோது, அசுரன் படத்தில் பாடல்கள் குறித்து நானும் ஜி.வி.பிரகாஷும் பேசியபோது நாட்டுப்புற பாடல்கள் வடிவில் இந்தப் படத்தின் பாடல்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.
அப்போது, ஒரு கல்லூரி விழாவில் சீமான் பாடிய பாடலை கேட்டேன். அந்தப் பாடலை உடனே ஜி.வி.பிரகாஷிடம் கேட்க சொன்னேன். அவருக்கும் அது பிடித்துப்போகவே, நானும் ஜி.வி.பிரகாஷும் சீமானை சந்தித்து இது குறித்து பேசினோம். அவர் தன் பாட்டி பாடிய பாடல்தான் என்று சொல்லவே, பின்னர் சீமான் பாடிய டியூன் வைத்து ஜீ.வி.பிரகாஷ் குமார் அந்தப் பாடலை உருவாக்கினார் என வெற்றிமாறன் கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
This website uses cookies.