சொந்தக்காரங்களே ஆள் வச்சு அடிச்சாங்க.. வலியால் துடித்தேன்.. சத்யராஜ் மகள் பகீர்..!

தமிழ் சினிமாவில் வில்லன் , ஹீரோ , குணசித்திர நடிகர் என தென்னிந்திய சினிமாவில் வலம் வந்துக்கொண்டிருக்கிறவர் நடிகர் சத்யராஜ். அவரது மகள் திவ்யா சத்தியராஜ். இவர் சமூக அக்கறையுள்ளவராக பல்வேறு காரியங்களில் தன்னை ஈடுபட்டு வருகிறார்.

இந்திய ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா அட்சய பாத்திரம் அறக்கட்டளை நல்லெண்ணத் தூதுவராகவும் உள்ளார். இந்நிறுவனம் அரசின் இலவச மதிய உணவுத் திட்டதை தமிழ்நாடு பள்ளிக் குழந்தைகளுக்காக நடைமுறைப்படுத்தி வருகிறது. இது ஊட்டச்சத்து குறைபாடுள்ள மற்றும் வசதி குறைந்த சமூகங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை இலவசமாக வழங்கும் முயற்சியாகும் .

இந்நிலையில், சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் மருத்துவ துறையில் கலக்கி வரும் நிலையில், தினமும் தனது இன்ஸ்டா பக்கத்தில், உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் குறித்து பதிவுகளை போட்டு வருகிறார்.

இந்த நிலையில், திவ்யா சத்யராஜ் கோவையில் தனக்கு நடந்த பகீர் சம்பவம் ஒன்றை instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், எனக்கு கோயம்புத்தூர் என்றாலே பயமாக இருக்கும் காரணம் என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் எனது உறவினர்களை ஆள் வைத்து அடித்தனர். ஒருநாள் என்னை அடிக்க காசு கொடுத்து அடியாட்களை அனுப்பினார். அந்த சமயத்தில், எனக்கு மாதவிடாய் வந்தது ரத்தப்போக்கு அதிகமாக இருந்தது.

அந்த பதற்றத்தில், என்னுடைய செல்போனையும் தொலைத்துவிட்டேன். அதன் பின்னர், எப்படியோ அங்கிருந்து தப்பி சென்னைக்கு வந்துவிட்டேன். சென்னை வந்த பின்பும் அந்த சம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன். அப்பாவுக்கு விஷயம் தெரிந்து மிகவும் கோபமடைந்தார். ஆனால், என் வாழ்க்கையில் ஆண்கள் எனக்காக சண்டையிடுவதை நான் விரும்பமாட்டேன்.

நானே அதை எதிர்கொள்வேன். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் மற்றும் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்டதை ஒப்பிடுகையில் எனக்கு நடந்தது ஒன்றுமே இல்லை என்பதை நான் அறிவேன். மதங்கள் கௌரவ கொலைக்காகவும் காதலர்களை பிரிக்கவும் பெண்களை இழிவுபடுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

நான் கடுமையாக தாக்கப்பட்டாலும், பரவாயில்லை. இதுபோன்ற கட்டமைக்கப்பட்ட மதங்களுக்கு எதிராக சமூகத்தில் நடக்கும் அநீதிகளை எதிர்த்தும் தொடர்ந்து குரல் கொடுப்பேன். வாழ்க்கை அவ்வளவு எளிதானது அல்ல. எனக்குள் இருக்கும் காயங்கள் இன்னும் ஆரவும் இல்லை. ஆனாலும், மனதில் அன்புடனும் தைரியத்தோடும் கோவைக்கு தொடர்ந்து செல்வேன். வலிமையான பெண்கள் அன்பு செலுத்துவதை நிறுத்த மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Poorni

Recent Posts

பிரபல நடிகர் தற்கொலை? 11வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவு!!

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…

25 minutes ago

பிரம்மாண்ட படத்தில் நடிக்க முடியாதபடி பண்ணிட்டாங்க? பிரபல ஹீரோவை கைகாட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி…

கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…

1 hour ago

பெண்களை மதிக்கிற மாதிரி நடிப்பாங்க; ஆனா சுயரூபமே வேற- மாளவிகா மோகனன் யாரை சொல்றாங்க?

கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…

3 hours ago

பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!

தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…

3 hours ago

தவெகவின் உண்மையான கட்டமைப்பு என்னவென்று இன்று தெரியும்.. ஆதவ் அர்ஜூனா சஸ்பென்ஸ்!

தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…

3 hours ago

This website uses cookies.