நடிகை கௌதமியின் மோசமான நிலைக்கு காரணமானவர் யார் தெரியுமா? அந்த அரசியல் கட்சியை சேர்ந்தவருதான்!!!
பாஜகவில் நீண்ட வருடங்களாக பல்வேறு பொறுப்புகளில் இருந்துவந்த நடிகை கௌதமி திடீரென பாஜகவில் , அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து இருந்ததோடு, இது தொடர்பாக, பாஜக தலைமைக்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தில், பாஜகவில் அங்கம் வகிக்கும் அழகப்பன் என்பவர் தன்னை 20 வருடத்திற்க்கு முன்னர் நான் சம்பாதித்த சொத்துக்களை கவனிக்க என்னை தொடர்பு கொண்டார். நான் தாய் தந்தை ஆதரவு இல்லாதவள். ஒரு குழந்தையுடன் இருந்தேன். அதனால் அழகப்பனை நம்பினேன்.
ஆனால், எனது சொத்துக்களை, பணத்தை அழகப்பன் ஏமாற்றிவிட்டார். இது தொடர்பாக நான் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளேன். எனக்கு தமிழக முதல்வர் மீதும், காவல்துறை மீதும் நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்து இருந்தார்.
மேலும் நடிகை கௌதமி அளித்த புகாரின் பேரில் அழகப்பன் என்பவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சென்னை மத்திய குற்ற பிரிவுக்கு காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக சோதனைகள் நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அழகப்பன் ரூ9.9 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அழகப்பன் கைது செய்யப்பட்டார். மேலும் நடிகை கவுதமியின் சொத்தை அதிக விலைக்கு விற்று மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பலராமனும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அழகப்பன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
This website uses cookies.