மேக் அப் மேனிடம் பலியாகும் நடிகைகள்; பிரபல டாக்டர் சொன்ன ஷாக் நியூஸ் ;

Author: Sudha
22 ஜூலை 2024, 3:58 மணி
Quick Share

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் சபாநாயகராக இருந்த க.ராஜாராமின் உடன் பிறந்த சகோதரருமான டாக்டர் காந்தராஜ். ஒரு யூ டியுப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்துப் பேசி இருக்கிறார் தற்போதைய சூழ்நிலையில் சினிமாவில் வாய்ப்பைப் பெறுவது என்பது எட்டாக் கனியாக மாறி விட்டது. பலர் சினிமாவில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொள்ள வேண்டிய நிலை இருப்பதாக பல நடிகைகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு ஓகே சொன்ன நடிகைகள் சினிமாவில் அதிக வாய்ப்பினை பெறுவதாகவும், விருப்பம் இல்லாத நடிகைகள் ஒரு சில படங்களிலேயே ஓரங்கட்டப்பட்டு, அதன்பிறகு அவர்களுக்கு வாய்ப்பே வராததால், அவர்கள் விலகுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

மேலும் நடிகையாக வருபவர்கள் கற்போடு இருப்பது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது. நடிகை சினிமாவில் அறிமுகம் ஆகும் ஒரு மேக்கப் மேனிடம் அனுப்புவார்கள், அந்த மேக்கப் மேன், உடம்பு முழுக்க பார்த்தால் தான் உனக்கு எந்த உடை செட் ஆகும் என்று சொல்லுவேன் என்று சொல்வார். ஏன் என்றால் மேக்கப் மேனிடம் கேட்டு விட்டுத்தான், காஸ்ட்டியூம் டிசைனர் எந்த உடை ஏற்ற உடை என்று முடிவு செய்வார். இதனால் நடிகைகள் முதலில் பலிகடா ஆவது மேக்கப் மேனிடம் தான் இவ்வாறு சினிமாவில் நடிகைகள் படும் கஷ்டம் குறித்து டாக்டர் காந்தராஜ் பேசி உள்ளார்.

  • Death sentence தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!
  • Views: - 93

    0

    0