கொரோனா இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளிவர இருந்த பல படங்கள் அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து, கொரோனா பாதிப்புகள் தற்போது குறைந்து வருவதைத் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. அதன்படி விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’, விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, அஜித்தின் ‘வலிமை’ உள்ளிட்ட படங்கள் வரிசையாக ரிலீசாகி உள்ளன.
அடுத்து சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் மார்ச் 10-ம் தேதியும், பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம், மார்ச் 11-ம் தேதியும் வெளியாகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ‘டான்’ படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நிலையில், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் லைகா நிறுவனமே கைப்பற்றியுள்ளது. ஆகையால் ஒரே தேதியில், ஒரு நிறுவனத்தின் இரண்டு படங்கள் வெளியானால், திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் என்பதால் டான் படம் மே 13-ல் தள்ளிபோவதாக கூறப்படுகிறது.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.