பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் ஆன ரவீனா ரவி பல்வேறு திரைப்படங்களுக்கு பல்வேறு டாப் ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்து பிரபலமான டப்பிங் ஆர்டிஸ்ட்டாக இருந்து வந்தார். குறிப்பாக இவர் கத்தி, ஐ உள்ளிட்ட படங்களுக்கு ஹீரோயின்களுக்கு பின்னணி குரல் கொடுத்ததன் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானார்.
ஐ திரைப்படத்தில் எமி ஜாக்சனுக்கு இவரது குரல் மிகவும் பொருத்தமாக இருந்தது. அந்த படத்தில் டயலாக் மற்றும் குரல் உள்ளிட்ட அனைத்துமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. மேலும் கத்தி திரைப்படத்தில் நடிகை சமந்தாவுக்கு குரல் கொடுத்ததும் ரவீனா ரவி தான் .
இது தவிர சாட்டை, 555, அனேகன் , பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோயின்களுக்கு இவர் குரல் கொடுத்திருக்கிறார். இதனிடையே ஒரு கிடாயின் கருணை மனு , காவல்துறை உங்கள் நண்பன், லவ் டுடே , மாமன்னன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் இவர் நடித்தும் இருக்கிறார்.
மாமன்னன் திரைப்படத்தில் வில்லன் நடிகரான பஹத் பாசில் மனைவியாக நடித்திருப்பார்.அவர் பெரிதாக டயலாக் எதுவுமே பேசவில்லை என்றாலும் கூட அந்த கதாபாத்திரம் மக்களின் மனதில் நிலைக்கும் படியாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் ரவீனா ரவி தற்போது தனது காதலனுடன் எடுத்துக் கொண்ட க்யூட்டான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தன்னுடைய காதலன் வருங்கால கணவர் என அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
இந்த புகைப்படங்களுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இந்த புகைப்படங்களை பார்த்த ரவீனா ரவியின் ரசிகர்கள் பலரும் எங்கள் இதயத்தை சுக்குநூறாக உடைத்த புகைப்படம் எனக் கூறி கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.