தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டும் இல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். திரையிலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தாலும் கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதி நடிப்பில் யாதும் ஊரே யாவரும் கேளீர், காந்தி டாக்கீஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. இதனிடையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் ‘மைக்கேல்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஹீரோவாக மட்டுமல்லாமல் தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களையும் தேர்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. காவல்துறை அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்திற்கு ’டிஎஸ்பி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்தப்படம் துவங்கப்பட்ட போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் சன் பிக்சர்ஸ் என குறிப்பிடப்படாமல், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இப்படத்தை தயாரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சன் பிக்சர்ஸ் ‘டிஎஸ்பி’ படத்திலிருந்து விலகியுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் கடைசியாக தயாரித்த பீஸ்ட், எதற்கும் துணிந்தவன் படங்கள் சுமாரான வெற்றியை பெற்றதாலும், விஜய் சேதுபதியின் மார்க்கெட் தற்போது டவுனாக இருப்பதாலும் ‘டிஎஸ்பி’ படத்திலிருந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் விலகியுள்ளதாக இணையத்தில் தீயாய் செய்திகள் பரவி வருகிறது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதியின் ’டிஎஸ்பி’ படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான…
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
This website uses cookies.