இனிமேல் விஜய் கூட படம் பண்ண முடியாது – காரணத்தை கறாரா கூறிய இயக்குனர் சேரன்!

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனரான சேரன் 2000ம் ஆண்டு வெளியான கொடி என்ற படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை துவங்கினார். அதையடுத்து இவர் இயக்கிய ஆட்டோகிராப் என்ற படம் 2004ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தனர்.

அடுத்ததாக தவமாய் தவமிருந்து படம் இயக்கி பட்டிதொட்டி எங்கும் கவனத்தை ஈர்த்தார். இத்திரைப்படம் தேசிய விருதுபெற்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் சொல்ல மறந்த கதை , பொக்கிஷம் போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார். அற்புதமான படங்களை இயக்கி மிகச்சிறந்த இயக்குனராக பெயர் எடுத்து சேரனின் படைப்புகளும் படைப்பாற்றலும் மிகத் துல்லியமாக கருத்துரை எடுத்துரைக்கும்.

இதனிடையே இவர் 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார். அந்நிகழ்ச்சியில் மூலம் அவப்பெயர் , வீண் வெறுப்பு, வீண் பழி உள்ளிட்டவற்றை பெற்று வெளியேறினார். அந்த சமயம் கே. எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பல இயக்குனர்கள் அவருக்கு ஆதரவாக பேசினார்கள்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், விஜய் வைத்து படம் எடுப்பீர்களா? என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, இல்லை…. விஜய் வைத்து இனிமேல் படம் எடுக்கமுடியாது. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. அவரது நிலை ரொம்ப உயர்ந்திடுச்சு. இப்போ படம் எடுக்கணும்னா அவருக்காக கதையை மாற்றனும். அது இல்லாமல் பிசியாக இருக்காரு. கண்டிப்பா ஒரு 10 வருஷத்துக்கு டேட் கிடைக்காது என சேரன் அந்த பேட்டியில் கூறினார். இதை வைத்து பார்க்கும்போது சேரனுக்கு விஜய் மீது ஏதோ ஒரு மனஸ்தாபம் இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

Ramya Shree

Recent Posts

வீடு புகுந்து பிரபல ரியல் எஸ்டேட் அதிபருக்கு மிரட்டல்.. நகை, செல்போன் பறிப்பு : கோவையில் பகீர்!

கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…

27 minutes ago

ஒரு மாதத்திற்குள் OTT-க்கு தாவும் விடாமுயற்சி…தேதி குறிச்சாச்சு..!

OTT-யில் விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT தேதியை படக்குழு…

33 minutes ago

திமுகவிடம் அடகு வைக்கப்பட்ட காங்கிரஸ்.. மூத்த தலைவர்களை விமர்சித்தால்.. தீவிரமடையும் உட்கட்சி விவகாரம்!

திமுகவிடம் காங்கிரஸை செல்வப்பெருந்தகை அடகு வைத்துவிட்டதாக மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர் கூறியுள்ளது உட்கட்சி விவகாரத்தில் தலைதூக்கியுள்ளது. சென்னை: “திமுகவின் ஆட்சி…

1 hour ago

நிறைய நெருக்கடிகள்.. நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச்…

2 hours ago

பொழைக்க தெரிஞ்ச புள்ள… சோபிதாவை கொண்டாடும் நாகர்ஜூனா குடும்பம்!

சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா விவாகரத்துக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக அறிவித்தார். இந்த காதலுக்கும் நாகர்ஜூனா குடும்பம் ஓகே சொன்னது.…

2 hours ago

மணிமேகலை போட்ட போஸ்ட்…யாருக்கு செருப்படி..குவியும் வாழ்த்துக்கள்.!

ஜீ தமிழில் அடியெடுத்து வைக்கும் மணிமேகலை சின்னத்திரையில் தன்னுடைய ஆங்கரிங் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் மணிமேகலை,இவர் கடந்த…

3 hours ago

This website uses cookies.