மற்ற நடிகர்கள் பேசுவதற்கு தயங்கும் சமூக விஷயங்களையும் அரசியல் கோட்பாடுகளையும் தன்னுடைய காமெடி மூலமாக மக்களுக்கு புரியும் வண்ணம் மிக எளிதாக நகைச்சுவையாக வெளிப்படுத்தியவர் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி
இவர் உடுமலைப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர்
இயற்பெயர் சுப்பிரமணியன், இவரது பெயரை கவுண்டமணி என மாற்றியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. நாடகத்துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் கவுண்டமணி.
750க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் கவுண்டமணி. 12 படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.கவுண்டமணி செந்தில் காமெடி இணை எல்லோராலும் ரசிக்கப்பட்டது செந்திலுடன் சேர்ந்து கரகாட்டக்காரன் படத்தில் இவர் செய்த வாழைப்பழ காமெடி உலகப்பிரசித்தம். சில திரைப்படங்களில் வில்லனாகவும் அசத்தியிருப்பார் கவுண்டமணி.
ஓஷோவின் தத்துவங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். அடிக்கடி ஓசோவின் தத்துவங்களை மேற்கோள் காட்டி பேசுவது இவர் வழக்கம். எனவே பார்த்தல் காமெடியன் படித்த அறிவாளி என இவரைப் பற்றி இவருடன் நடிக்கும் சக நடிகர்கள் குறிப்பிடுவதுண்டு.
கவுண்டமணி முதலில் அறிமுகமான திரைப்படம் ராமன் எத்தனை ராமனடி ஆனால் அதற்கு முன்பாகவே சில படங்களில் கூட்டத்தில் தோன்றியிருப்பார் கவுண்டமணி.
சர்வர் சுந்தரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களில் கூட்டத்தில் ஒருவராக நின்ற கவுண்டமணி இன்று நகைச்சுவை ராஜாங்கத்தின் மன்னனாகத் திகழ்கிறார்.
கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது…
நாளை ரிலீஸ் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள…
கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக்…
தமன்னாவின் புதிய திரைப்படம்… 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் “ஓடெலா ரயில்வே ஸ்டேஷன்” என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இதில்…
This website uses cookies.