பகத் பாசிலுக்கு மட்டும் கல்யாணம் ஆகலன்னா அதை பண்ணி இருப்பேன்.. வெளிப்படையாக பேசிய இளம் நடிகை..!

தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த கலை நுணுக்கம் அதிகம் தெரிந்து முறையாக திரைப்படம் எடுக்கும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். பிரபல இயக்குனரான ராமிடன் உதவி இயக்குனராக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறார்.

அவரிடம் திரை நுணுக்கங்களை கற்றுத்தெறிந்து திரைத்துறையில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பிரபல வார இதழ் பத்திரிகையான “மறக்க நினைக்கிறேன்” என்ற தொடரை எழுதியுள்ளார். தமிழில் பெரியேறும் பெருமாள் படத்தை இயக்கி மாபெரும் வெற்றிப்படைத்தார். திருநெல்வேலிக்குப் அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத்தை தொழிலாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த மாரி செல்வராஜ் கிராமங்கள் சார்ந்த படங்களை இயக்குவதிலேயே ஆர்வமிக்கவராக இருக்கிறார்.

இவர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு தற்போது மாமன்னன் படத்தை இயக்கி அண்மையில் அப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று நல்ல வசூலும் ஈட்டியது. இந்நிலையில் இப்படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக ரவீனா ரவி நடித்திருப்பார்.

இதனிடையே, படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் ரவீனா ரவி குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் என்று தனக்கு தெரியாது எனவும், சேலத்து பொண்ணு மாதிரி இருக்காங்க என்று தன் மனைவி சொன்னதால், அப்படி ஒரு முக்கியமான முகம் தனக்கு தேவைப்பட்டதால் ரவீனா ரவியை தேர்வு செய்ததாக தெரிவித்தார்.

இதனிடையே, ஒரு காட்சியில் பகத் பசிலை கட்டி அணைத்து பின் செல்ல வேண்டும் அப்போது கட்டிப்பிடித்து முடித்த போது சட்டையில், லிப்ஸ்டிக் ஒட்டி இருந்ததாகவும் எப்படி நடந்துச்சு என்று கேட்டதற்கு நான் பண்ணல தானாவே நடந்துருச்சு என்று ரவீனா தெரிவித்ததாக மாறி செல்வராஜ் தெரிவித்தார். பின்னர் அந்த காட்சியை சிஜி-யில் எடிட் செய்து மாற்றினோம் என்று மாரி செல்வராஜ் காமெடியாக கூறியுள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பகத் பசிலை கட்டிப்பிடிக்கும் காட்சி பற்றி ரவீனா ரவி பகிர்ந்துள்ளார். கட்டிப்பிடிக்கும் போது பகத் பசில் சட்டையில் லிப்ஸ்டிக் பட்டுவிட்டது என்றும், ஆனால் தான் முத்தம் கொடுக்கவில்லை எனவும், இதை பார்த்த படப்பிடிப்பில் இருந்த அனைவரும் கிண்டல் அடித்துக் கொண்டிருந்ததாகவும், பகத்பசிலுக்கு திருமண மட்டும் ஆகவில்லை என்றால் கூட தான் முத்தம் கொடுத்து இருப்பேன் என்று வெளிப்படையாக ரவீனா தெரிவித்திருக்கிறார்.

Poorni

Recent Posts

காதல் திருமணத்திற்கு காத்திருந்த இளம்பெண் கொலை… கடைசியாக பேசிய காதலன் : காத்திருந்த டுவிஸ்ட்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…

20 minutes ago

விஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?

தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…

25 minutes ago

கலவரத்தை தூண்டும் எம்புரான், இது திட்டமிட்ட சதி- பொங்கி எழுந்த சீமான்

அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…

1 hour ago

3 மணி நேர உண்ணாவிரதத்தை மறந்து விடுவோமா? கச்சத்தீவு கபட நாடகம் நடத்தும் திமுக : அண்ணாமலை அட்டாக்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…

2 hours ago

ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..

கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

3 hours ago

This website uses cookies.