மீனா அந்த விஷயத்தில் ரொம்ப வீக்… இது எல்லாம் இவ்வளவு ஓபனாவா செல்லுறது..!

சினிமா உலகில் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, உச்ச நடிகையாக சிகரம் தொட்டவர். உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த், அஜித், விஜய், பிரபு, சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வெற்றி கண்டு உள்ளார். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

நடிகை மீனா 40 ஆண்டுகளாக சினிமாவில் ஆக்டிவாக உள்ளார், இவர் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இதனிடையே, கடந்த 40 ஆண்டுகளாக நடிகை மீனா சினிமாவில் சாதனை படைத்ததை கவுரவிக்கும் விதமாக தனியார் யூட்யூப் சேனல் ஒன்று மீனா 40 என்று தலைப்பில் விழா எடுத்தது.

இதில் முன்னணி நடிகர் நடிகைகள் பலர் பங்கேற்றனர். குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்த், சரத்குமார், போனி கபூர் என ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி குறித்தும் நடிகை மீனா குறித்தும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் பகிர்ந்த தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது நடிகை மீனா படையப்பா படத்தில் நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டாராம்.

இதை அவரே பல முறை வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். இதனை ரஜினிகாந்தும் மீனா 40 நிகழ்ச்சியில் தெரிவித்து இருந்தார். ஆனால், நீலாம்பரி கதாப்பாத்திரம் வில்லி வேடம் என்பதால் அது மீனாவுக்கு சரியாக வராது என நடிகர் ரஜினிகாந்த், மற்றும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் மீனாவின் அம்மா ஆகியோர் தெரிவித்து நடிகை மீனாவை சமாதானப்படுத்தி உள்ளனர்.

முன்னதாக இதுகுறித்து பேசிய இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். அதாவது மீனாவுக்கு எப்படி நடித்தாலும் வில்லத்தனம் வரவே வராது என்றும், மீனாவின் கண்களும் அவரது நடிப்பும் குழந்தைத்தனமாக இருக்கும் என்றும் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், படையப்பா படம் மட்டும் இல்லை, வேறு எந்த படமாக இருந்தாலும் நடிகை மீனாவுக்கு நெகட்டிவ் ரோல் சுத்தமாக செட்டாகாது என்று கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், மீனா படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடிக்க முடியாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம் என்று தெரிவித்தார். நடிகை மீனா கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நாட்டாமை, அவ்வை ஷண்முகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!

தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…

2 hours ago

தறிகெட்டு ஓடும் ‘டிராகன்’…மொத்த வசூல் இத்தனை கோடியா.!

காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…

3 hours ago

டி.ராஜேந்திரனுக்கு என்ன ஆச்சு…ஆளே அடையாளம் தெரியல..வைரலாகும் போட்டோ.!

டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…

4 hours ago

வெறி நாய் கடிக்கு சிகிச்சை எடுத்த இளைஞர் உயிரை மாய்த்த சோகம் : கோவை அரசு மருத்துவமனையில் ஷாக்!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…

4 hours ago

பாக்ஸ் ஆபீஸ் சம்பவம் ரெடி மாமே…வெளிவந்த குட் ‘பேட் அக்லி’ அப்டேட்.!

பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…

4 hours ago

விஜய்யிடம் பேசுவது இல்லை.. அவர் படத்தை பார்ப்பதும் இல்லை : பிரபல வில்லன் நடிகர் ஓபன் டாக்!

நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது கடைசிபடம் ஜனநாயகன் தான் என கூறியுள்ள நிலையில் தமிழக…

5 hours ago

This website uses cookies.