ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சரிகமபா’ மூலம் 2017ஆம் ஆண்டு பெரும் புகழ் வெளிச்சத்து வந்தவர் பாடகி ராக்ஸ்டார் ரமணியம்மாள். இவர் சிறுவயதில் இசை கற்கத் தொடங்கி பின் குடும்ப சூழல் காரணமாக வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார்.
இருந்தாலும் பாடல் பாடுவதில் தனக்கு இருக்கும் ஆர்வத்தை திருமண நிகழ்ச்சிகளிலும் பாடி வந்துள்ளார். அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான காதல் படத்திலேயே பாடகியாக ரமணியம்மாள் அறிமுகமானார்.
அதன் பின்னர் பரத் நடித்த காதல் படத்தில் தண்டட்டி கருப்பாயி பாடலைப் பாடிய மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். தொடர்ந்து சில படங்களில் பாடி வந்த ரமணியம்மாள் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடி நடுவர் , ஆடியஸ், போட்டியாளர்கள் என எல்லோரையும் பிரம்மிக்க செய்தார்.
அதன் பின்னர் நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. ஹரிதாஸ், ஜூங்கா, சண்டக்கோழி 2, நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா மற்றும் காப்பான் ஆகிய படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இந்நிலையில் 63 வயதான ரமணியம்மாள் உடல்நிலை குறைவால் இன்று காலை மரணமடைந்துள்ளார். இந்த திடீர் மரணம் திரையுலகை சேர்ந்தவர்களை பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.