தமிழ் திரையுலகில் துணை இயக்குனராக பணியாற்றி வந்து தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் மிஸ்கின். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல பரிமாணங்களில் தமிழ் திரையுலகில் விளங்கி வரும் இவர், பல இளம் இயக்குனர்கள் மற்றும் ரசிகர்களின் பேவரைட்.
இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த இவர், அவர் இயக்கிய யூத் படத்தில் சிறு காட்சியில் தோன்றியிருப்பார். பின்னர், சிறு பட்ஜெட்டில் சித்திரம் பேசுதடி என்னும் படத்தை இயக்கினார். முதல் படமே பெரும் வெற்றியை பெற்ற நிலையில், இதனைத் தொடர்ந்து, இவர் இயக்கிய அஞ்சாதே படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
பின்னர், யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். இதன் நடுவே, சில திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றினார். தற்போது, விஜய் நடிக்கும் லியோ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் மிஸ்கின், நடிகர் விஜய் குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அதில் அவர் பேசியதாவது, நான் இயக்குனர் வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக இருந்தபோது 6 மாதம் விஜயிடம் நான் பேசவில்லை. 6 மாதம் கழித்து என் பின் கழுத்தை பிடித்து ஏன் அண்ணா என்னிடம் பேசவே மாட்டேங்கிறீங்க என கேட்டார். அதற்கு நான் உங்களை ஒரு கதையோடு தான் சந்தித்து பேசவேண்டும் என்று கூறினேன். அதன் பின்னர், சித்திரம் பேசுதடி படத்தை எடுத்து முடித்து விட்டு விஜய்க்கு அதை போட்டுக் காண்பித்தேன்.
அப்போது லிப்டில் சென்று கொண்டிருக்கும்போது இந்த கதை உங்களுக்காக தான் முதலில் எழுதினேன் என கூறவே, விஜய் என் கழுத்தை பிடித்து லிப்டில் தள்ளி இந்த கதையை ஏன் எனக்கு சொல்லவில்லை என்று கூறினார். அதற்கு நான், உங்க அப்பா 18 சீன் மாத்திருப்பாரு, நீங்க18 சீன் மாத்திருப்பீங்க. நான் தற்கொலையே பண்ணி இருப்பேன். அதனால் தான் வேண்டாம் என்று நினைத்தேன் என கூறியுள்ளார். மேலும், கமல் சாரை மனதில் வைத்து எழுதிய கதை விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அந்த கதை மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கதையாக இருக்கும். இன்னும் 2 3 வருடங்களில் விஜய்க்கு அந்த கதையை சொல்வேன்’ என்று பேசி இருக்கிறார். மேலும், லியோ பட படப்பிடிப்பு தளத்தில் விஜய், தன்னை நன்றாக கவனித்து கொண்டதாகவும், 20 வருடங்கள் ஆகியும், விஜய் மாறாமல் இருப்பது சந்தோசமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.