விஜய்யை போல குடும்பத்தை வெறுத்து ஒதுக்கிய பிரபல வாரிசு நடிகர் : காதல் மனைவியுடன் தனி வீட்டில் தஞ்சம்!!!

சினிமாவில் உள்ள நடிகர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல முடிவுகளை எடுத்து வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

என்னதான் அப்படி செய்திகள் வந்தாலும் அதை அந்த குறிப்பிட்ட நடிகரோ நடிகையோ மனம் திறந்து அறிவித்தால்தான் ஊர்ஜிதமாகும்.

அப்படித்தான் சமீபத்தில் நடிகர் விஜய் குறித்து ஏராளமான தகவல் வெளியாகின. அதெல்லாம் உண்மையா இல்லையா என்பது குறித்து அவர் தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இந்த நிலையில் விஜய்யை வேண்டுமென்றே பத்திரிகையாளர்கள் சிலர் மிரட்டுவதாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் விஜய்யை போலவே நடிகர் சூர்யாவும் அதிரடி முடிவெடுத்துள்ளது ரசிர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் சோடை போகாத சூர்யா, காக்க காக்க, நந்தா என அடுத்ததடுத்து ஹிட் படங்களில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். இவர் நடிக்கும் போதே ஜோதிகாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே என்ற படம் மூலம் மீண்டும் நடிக்க துவங்கினார். அதன் பின் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

இதற்கு சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து 2D என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கினர்.

தொடர்ந்து இருவரின் படங்களை தயாரித்து வந்த நிலையில், மற்ற ஹீரோ படங்களையும் தயாரித்து அதிலும் வெற்றி தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளனர்.

தயாரிப்பு பணி மட்டுமல்லாமல் பல வியாபாரங்களை செய்யும் சூர்யா, மும்பை விமான நிலையத்தின் பார்க்கிங் ஏலத்தை எடுத்து செம லாபம் பெற்றுள்ளார்.

மேலும் மும்பையில் பல தொழில்களை ஆரம்பிக்க உள்ள சூர்யா, மும்பையில் புதிய வீட்டை வாங்கி அதில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியேறியுள்ளார்.

இது சிவக்குமாருக்கு பிடிக்கவில்லை. இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார், மேலும் ஜோதிகா திருமணத்திற்கு பின் நடிப்பதற்கு தடை போட்டும் அவர் மீறியுள்ளது சிவக்குமாருக்கு பிடிக்கவில்லையாம்.

சூர்யா தன் குடும்பத்துடன் மும்பையில் குடியேறியது மேலும் சிவகுமாருக்கு ஆத்திரத்தை கிளப்பியுள்ளதாம். பாலிவுட் திரையுலகில் சூர்யாவை ஒரு முன்னணி நடிகராக மாற்றவேண்டும் என ஜோதிகா முடிவெடுத்துள்ளதால் இருவரும் தற்போது மும்பையில் குடியேறியுள்ளதாக ஒரு தகவல் வருகின்றன.

சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும் போது சிவக்குமாருடன் தங்கும் சூர்யா, மற்ற நாட்களில் ஜோதிகாவுடன் தனி வீட்டிற்கு சென்றுவிடுவதால் கடும் அப்செட்டில் சிவக்குமார் உள்ளதாக பயில்வான் கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

15 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

15 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

16 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

16 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

17 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

17 hours ago

This website uses cookies.