விஜய்யை போல குடும்பத்தை வெறுத்து ஒதுக்கிய பிரபல வாரிசு நடிகர் : காதல் மனைவியுடன் தனி வீட்டில் தஞ்சம்!!!

சினிமாவில் உள்ள நடிகர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல முடிவுகளை எடுத்து வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

என்னதான் அப்படி செய்திகள் வந்தாலும் அதை அந்த குறிப்பிட்ட நடிகரோ நடிகையோ மனம் திறந்து அறிவித்தால்தான் ஊர்ஜிதமாகும்.

அப்படித்தான் சமீபத்தில் நடிகர் விஜய் குறித்து ஏராளமான தகவல் வெளியாகின. அதெல்லாம் உண்மையா இல்லையா என்பது குறித்து அவர் தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இந்த நிலையில் விஜய்யை வேண்டுமென்றே பத்திரிகையாளர்கள் சிலர் மிரட்டுவதாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் விஜய்யை போலவே நடிகர் சூர்யாவும் அதிரடி முடிவெடுத்துள்ளது ரசிர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் சோடை போகாத சூர்யா, காக்க காக்க, நந்தா என அடுத்ததடுத்து ஹிட் படங்களில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். இவர் நடிக்கும் போதே ஜோதிகாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே என்ற படம் மூலம் மீண்டும் நடிக்க துவங்கினார். அதன் பின் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

இதற்கு சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து 2D என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கினர்.

தொடர்ந்து இருவரின் படங்களை தயாரித்து வந்த நிலையில், மற்ற ஹீரோ படங்களையும் தயாரித்து அதிலும் வெற்றி தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளனர்.

தயாரிப்பு பணி மட்டுமல்லாமல் பல வியாபாரங்களை செய்யும் சூர்யா, மும்பை விமான நிலையத்தின் பார்க்கிங் ஏலத்தை எடுத்து செம லாபம் பெற்றுள்ளார்.

மேலும் மும்பையில் பல தொழில்களை ஆரம்பிக்க உள்ள சூர்யா, மும்பையில் புதிய வீட்டை வாங்கி அதில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியேறியுள்ளார்.

இது சிவக்குமாருக்கு பிடிக்கவில்லை. இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார், மேலும் ஜோதிகா திருமணத்திற்கு பின் நடிப்பதற்கு தடை போட்டும் அவர் மீறியுள்ளது சிவக்குமாருக்கு பிடிக்கவில்லையாம்.

சூர்யா தன் குடும்பத்துடன் மும்பையில் குடியேறியது மேலும் சிவகுமாருக்கு ஆத்திரத்தை கிளப்பியுள்ளதாம். பாலிவுட் திரையுலகில் சூர்யாவை ஒரு முன்னணி நடிகராக மாற்றவேண்டும் என ஜோதிகா முடிவெடுத்துள்ளதால் இருவரும் தற்போது மும்பையில் குடியேறியுள்ளதாக ஒரு தகவல் வருகின்றன.

சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும் போது சிவக்குமாருடன் தங்கும் சூர்யா, மற்ற நாட்களில் ஜோதிகாவுடன் தனி வீட்டிற்கு சென்றுவிடுவதால் கடும் அப்செட்டில் சிவக்குமார் உள்ளதாக பயில்வான் கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

22 minutes ago

திமுகதான் நம்பர் ஒன்.. அடித்துக் கூறும் அண்ணாமலை.. மறுக்கும் அமைச்சர்.. என்ன நடக்கிறது?

மத்திய, மாநில அரசுகளின் கடன் விவரங்களைக் குறிப்பிட்டு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அண்ணாமலை கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை:…

42 minutes ago

பள்ளிக்குச் சென்ற குழந்தைகள்.. தாயைக் கொன்று தப்பிய தந்தை.. என்ன நடந்தது?

கோவையில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, கேரளாவுக்குச் சென்று கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்: கோவை…

1 hour ago

GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி பட டீசரை பார்த்த நடிகர் விஜய் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.…

1 hour ago

பெத்த பிள்ளை கூட கண்டுக்கல..கண்ணீரில் பிரபல நடிகை..ஓடி சென்று உதவிய KPY பாலா.!

தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டிய பாலா தமிழ் திரைப்பட உலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ்,அண்மைக் காலமாக கடுமையான…

2 hours ago

காதலியின் தாயோடு காதலன் செய்த அதிர்ச்சி சம்பவம்.. கண்ணிமைக்கும் நொடியில் நடந்தது என்ன?

தெலுங்கானாவில் காதலை கைவிடச் சொன்ன காதலியின் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.…

2 hours ago

This website uses cookies.