சினிமாவில் நடிக்க வாய்ப்பு தரேன்னு அந்த மாதிரி கூப்பிடுவாங்க… பிரபல நடிகரின் மனைவி ஓபன் டாக்!!

சினிமாவில் வாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வது தற்போது அதிகரித்து காணப்படுகிறது. இளம் நடிகைகள் தங்கள் எதிர்காலத்திற்காக சிலர் அட்ஜெஸ்ட் செய்தும் சிலர் ஒதுக்கியும் வருகிறார்கள்.

ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக இருந்த சீதா தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். பார்த்திபன் முன்னணி நடிகையாக இருந்த சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் 2001ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையில், தற்போது பார்த்திபன் குறித்து அடிக்கடி பேசி வருகிறார் சீதா.

ஏறகனவே இருவரும் ஏன் விவாகரத்து பெற்றோம் என பேசியிருந்த சீதா, தற்போது மீடூ விவகாரம் பற்றியும் மனம் திறந்துள்ளார். 1985ல் வெளியான ஆண் பாவம் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சீதா.

பாண்டியராஜன் இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், புதிய பாதை திரைப்படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் பார்த்திபன்.

புதிய பாதை படத்தில் ஜோடியாக நடித்த பார்த்திபனும் சீதாவும், காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 1990ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, அடுத்த 11 ஆண்டுகளில் பிரிந்தனர்.

இந்த ஜோடிக்கு 2 மகளும் 1 மகனும் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்த சீதா மீ டூ விவகாரம் குறித்தும் மனம் திறந்துள்ளார்.

அதில், “மீ டூ ஆரம்பித்தது நல்ல விசயம் தான். அது தனக்காக பேசத் தெரியாத பெண்களுக்கு சரியான வாய்ப்பாக அமைந்தது. அதேநேரம் இப்போ எல்லா பெண்களுமே ரொம்ப தைரியமா இருக்காங்க, தனியா ஷூட்டிங் வர்றாங்க. நடிகைகள் கிட்ட யாராவது போன் பண்ணி அப்ரோச் செய்தால், முடியாதுன்னு சொல்லிட்டு வேலையை பார்க்க வேண்டியது தானே?. அது இல்லாம 10 ஆண்டுகள் கழித்து சொல்வது சரியல்ல.

அந்த நேரமே உங்களால் ஏன் கேட்க முடியவில்லை? ஏனென்றால் அந்த நேரம் உங்களுக்கு அந்த வாய்ப்பு வேண்டும். அப்படித்தானே? இது சினிமா மட்டும் இல்லை, எல்லாருக்குமே பொருந்தும் தான்” எனக் கூறியுள்ளார்.

மேலும், “வேலைக்காக தானே வெளியில் சொல்லாமல் இருந்தீங்க? பிடிக்கலைன்னா வெளியே வரணும், இல்லை உங்களை அப்ரோச் பண்றவங்கள மாற்ற வேண்டும். இல்லைன்னா நீங்களே முடியாதுன்னு என சொல்லிட முடியும். இந்த 10 ஆண்டில் அந்த நபருக்கு நிறைய மாற்றங்கள் வந்திருக்கலாம் அல்லவா? அவருக்கு அது தண்டனை தானே?” எனக் கூறியுள்ளார்.

அதேபோல், “யாருக்கும் தெரியாமல் அந்த நபர் போன் செய்தால், நீங்களும் யாருக்கும் தெரியாமல் முடியாது என சொல்லிவிடலாம். நான் சொல்றதை கேட்டு சிலர் திட்டலாம். ஆனால், இதுதான் என் பார்வை.

எனக்கு பிரச்சினை வந்தால் நான் அதை எதிர்கொள்வேன். எனக்கு ‘மீ டூ’ வேண்டாம், சிலபேர் கேட்கத்தான் செய்வார்கள். நீங்க முடியாதுன்னு சொல்லிடலாம்” என அழுத்தமாக கூறியுள்ளார்.

முன்னதாக விவாகரத்து குறித்து பேசியிருந்த சீதா, “பார்த்திபன் தான் என்னிடம் முதலில் காதலை சொன்னார். தினமும் தொலைபேசியில் அழைத்து அந்த மூணு வார்த்தையை மட்டும் சொல்லிடுங்கன்னு கேட்பார்.

ஒருநாள் பேசும்போது ஐ லவ் யூ என்று நான் சொன்னேன். அதை என் அப்பா வேறு ஒரு போனில் இருந்து கேட்டுவிட்டார். அதன்பிறகு தான் எங்கள் திருமணம் நடைபெற்றது.

எனக்கும் பார்த்திபனுக்கும் காதல் உள்ளுக்குள் இருந்தது. நான் ஒரு சராசரி பொண்ணு, பார்த்திபனும் அந்த அளவில் இருந்தவர் தான். பணம், அந்தஸ்தை எதிர்பார்த்து நான் அவரை விரும்பவில்லை.
கணவரிடம் அன்பு வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மட்டும் தான் என்னிடம் இருந்தது. இது அவருக்கும் நன்றாக தெரியும்” எனக் கூறியுள்ளார்.

மேலும், சினிமா நடிகரை திருமணம் செய்யும் நடிகைகளுக்கு மட்டும் தான் வாழ்க்கையில் பிரச்சினை என்று இல்லை. சினிமா என்பதால் அவர்களின் பிரச்சினை வெளியே தெரிகிறது.

மற்றவர்களுக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது. பெண்ணுக்கு வேலை இருந்தால், அவள் பாதி பிரச்சினைகளை கடந்துவிடலாம் என சீதா பேசியுள்ளார். மீ டூ குறித்தும் பார்த்திபனுடனான விவாகரத்து பற்றியும் சீதா மனம் திறந்து பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

14 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

15 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

16 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

16 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

16 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

17 hours ago

This website uses cookies.