சினிமாவில் நடிக்க வாய்ப்பு தரேன்னு அந்த மாதிரி கூப்பிடுவாங்க… பிரபல நடிகரின் மனைவி ஓபன் டாக்!!

சினிமாவில் வாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வது தற்போது அதிகரித்து காணப்படுகிறது. இளம் நடிகைகள் தங்கள் எதிர்காலத்திற்காக சிலர் அட்ஜெஸ்ட் செய்தும் சிலர் ஒதுக்கியும் வருகிறார்கள்.

ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக இருந்த சீதா தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். பார்த்திபன் முன்னணி நடிகையாக இருந்த சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் 2001ல் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையில், தற்போது பார்த்திபன் குறித்து அடிக்கடி பேசி வருகிறார் சீதா.

ஏறகனவே இருவரும் ஏன் விவாகரத்து பெற்றோம் என பேசியிருந்த சீதா, தற்போது மீடூ விவகாரம் பற்றியும் மனம் திறந்துள்ளார். 1985ல் வெளியான ஆண் பாவம் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சீதா.

பாண்டியராஜன் இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், புதிய பாதை திரைப்படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் பார்த்திபன்.

புதிய பாதை படத்தில் ஜோடியாக நடித்த பார்த்திபனும் சீதாவும், காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 1990ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, அடுத்த 11 ஆண்டுகளில் பிரிந்தனர்.

இந்த ஜோடிக்கு 2 மகளும் 1 மகனும் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்த சீதா மீ டூ விவகாரம் குறித்தும் மனம் திறந்துள்ளார்.

அதில், “மீ டூ ஆரம்பித்தது நல்ல விசயம் தான். அது தனக்காக பேசத் தெரியாத பெண்களுக்கு சரியான வாய்ப்பாக அமைந்தது. அதேநேரம் இப்போ எல்லா பெண்களுமே ரொம்ப தைரியமா இருக்காங்க, தனியா ஷூட்டிங் வர்றாங்க. நடிகைகள் கிட்ட யாராவது போன் பண்ணி அப்ரோச் செய்தால், முடியாதுன்னு சொல்லிட்டு வேலையை பார்க்க வேண்டியது தானே?. அது இல்லாம 10 ஆண்டுகள் கழித்து சொல்வது சரியல்ல.

அந்த நேரமே உங்களால் ஏன் கேட்க முடியவில்லை? ஏனென்றால் அந்த நேரம் உங்களுக்கு அந்த வாய்ப்பு வேண்டும். அப்படித்தானே? இது சினிமா மட்டும் இல்லை, எல்லாருக்குமே பொருந்தும் தான்” எனக் கூறியுள்ளார்.

மேலும், “வேலைக்காக தானே வெளியில் சொல்லாமல் இருந்தீங்க? பிடிக்கலைன்னா வெளியே வரணும், இல்லை உங்களை அப்ரோச் பண்றவங்கள மாற்ற வேண்டும். இல்லைன்னா நீங்களே முடியாதுன்னு என சொல்லிட முடியும். இந்த 10 ஆண்டில் அந்த நபருக்கு நிறைய மாற்றங்கள் வந்திருக்கலாம் அல்லவா? அவருக்கு அது தண்டனை தானே?” எனக் கூறியுள்ளார்.

அதேபோல், “யாருக்கும் தெரியாமல் அந்த நபர் போன் செய்தால், நீங்களும் யாருக்கும் தெரியாமல் முடியாது என சொல்லிவிடலாம். நான் சொல்றதை கேட்டு சிலர் திட்டலாம். ஆனால், இதுதான் என் பார்வை.

எனக்கு பிரச்சினை வந்தால் நான் அதை எதிர்கொள்வேன். எனக்கு ‘மீ டூ’ வேண்டாம், சிலபேர் கேட்கத்தான் செய்வார்கள். நீங்க முடியாதுன்னு சொல்லிடலாம்” என அழுத்தமாக கூறியுள்ளார்.

முன்னதாக விவாகரத்து குறித்து பேசியிருந்த சீதா, “பார்த்திபன் தான் என்னிடம் முதலில் காதலை சொன்னார். தினமும் தொலைபேசியில் அழைத்து அந்த மூணு வார்த்தையை மட்டும் சொல்லிடுங்கன்னு கேட்பார்.

ஒருநாள் பேசும்போது ஐ லவ் யூ என்று நான் சொன்னேன். அதை என் அப்பா வேறு ஒரு போனில் இருந்து கேட்டுவிட்டார். அதன்பிறகு தான் எங்கள் திருமணம் நடைபெற்றது.

எனக்கும் பார்த்திபனுக்கும் காதல் உள்ளுக்குள் இருந்தது. நான் ஒரு சராசரி பொண்ணு, பார்த்திபனும் அந்த அளவில் இருந்தவர் தான். பணம், அந்தஸ்தை எதிர்பார்த்து நான் அவரை விரும்பவில்லை.
கணவரிடம் அன்பு வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மட்டும் தான் என்னிடம் இருந்தது. இது அவருக்கும் நன்றாக தெரியும்” எனக் கூறியுள்ளார்.

மேலும், சினிமா நடிகரை திருமணம் செய்யும் நடிகைகளுக்கு மட்டும் தான் வாழ்க்கையில் பிரச்சினை என்று இல்லை. சினிமா என்பதால் அவர்களின் பிரச்சினை வெளியே தெரிகிறது.

மற்றவர்களுக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது. பெண்ணுக்கு வேலை இருந்தால், அவள் பாதி பிரச்சினைகளை கடந்துவிடலாம் என சீதா பேசியுள்ளார். மீ டூ குறித்தும் பார்த்திபனுடனான விவாகரத்து பற்றியும் சீதா மனம் திறந்து பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?

பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…

3 hours ago

பெண் ஆசிரியரை செருப்பால் அடித்த கல்லூரி மாணவி.. அதிர்ச்சி வீடியோ!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…

3 hours ago

அப்போ எல்லாமே செட்டப்பா? உஷாராக பிளான் போட்ட கமல்ஹாசன்? இதான் விஷயமா?

பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…

4 hours ago

திடீரென வெளியான வீடியோ…அதிர்ச்சியில் உறைந்து போன பிரியா வாரியர்!!

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…

4 hours ago

பஸ் கண்டக்டருடன் உல்லாசம்.. ரகசிய வீடியோ : தப்பான சகவாசத்தால் விபரீதம்!

பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…

4 hours ago

ரெட்ரோ படத்தில் வடிவேலு? சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குனர்? ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!

புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

5 hours ago

This website uses cookies.