பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம், அதைத் தொடர்ந்து வந்த தைப்பூச திருவிழா முடிந்து பல பிரபலங்கள் பழனிக்கு வருகை தருகின்றனர்.
அந்த வகையில் பழனி முருகன் கோவிலுக்கு சினிமா நடிகர் கௌதம் கார்த்திக் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். கௌதம் கார்த்திக் மனைவியும் சினிமா நடிகையுமான மஞ்சிமா மோகன் உடன் வருகை தந்தார்.
மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் சாமி தரிசனம் செய்ய மலை மீது சென்றனர்.
மலை மீது சென்ற கௌதம் கார்த்திக்கை பார்த்து பக்தர்கள் பலரும் புகைப்படம் எடுக்க திரண்டனர். இந்த நிலையில் விரைவாக சாமி தரிசனம் செய்ய கௌதம் கார்த்திக் அழைத்து செல்லப்பட்டார்.
பின்னர் கோயில் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட பிரசாதத்தை பெற்றுக்கொண்டு மலைமீது இருந்து கீழே இறங்கி புறப்பட்டுச் சென்றார். பழனி முருகன் கோயில் குடமுழுக்கு நிறைவடைந்த பிறகு அடுத்தடுத்து சினிமா நடிகர்கள் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது.
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
This website uses cookies.