துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், அதனைத் தொடர்ந்து, காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, NGK, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற வித்தியாசமான திரைக்கதைகளை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்.
பீஸ்ட், சாணி காயிதம், நானே வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ஒரு படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். இவ்வாறு இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் தொடர்ந்து தன் திறமையை நிரூபித்து வரும் செல்வராகவன் நடித்த பகாசூரன் திரைப்படமும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
பகாசூரன் பட புரோமோஷனுக்காக செல்வராகவன் நிறைய பேட்டிகளில் பங்கேற்று வந்தார். அப்போது ஒரு பேட்டியில், எனக்கு சோனியாக அகர்வாலுடன் விவாகரத்து ஆன போது, தனுஷ் என்னிடம், இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வேண்டாம், கடவுள் உனக்கு நல்ல வாய்ப்பை கொடுத்திருகிறார்.
இப்படியே “சிங்கிளாகவே” வாழ்நாள் முழுவதும் இருந்து விடு என கூறினார். ஆனால் கீதாஞ்சலி மீது இருந்த நம்பிக்கையால் இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன். அவர் என் வாழ்க்கையை அழகாக மாற்றிவிட்டார் என கூறியிருக்கிறார் செல்வராகவன்.
சில படங்களில் ஒன்றாக பணியாற்றித்தன் மூலம் காதலித்து சோனியா அகர்வால் – செல்வராகவன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின் கீதாஞ்சலியை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.