தமிழ் சினிமாவில் தனது திறமையால் வளர்ந்து வந்து உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் ஆரம்ப காலத்தில் தன்னுடைய கடின உழைப்பால் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்து பல வெற்றிப்படங்களை குவித்து,ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தொடக்கத்தில் காமெடி கலந்த குடும்ப படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்த அவர்,காலப்போக்கில் பல ஆக்ஷன் படங்களிலும் நடித்து தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார்.
அந்த வகையில் அவருடைய நடிப்பில் கடந்த வருடம் தீபாவளி அன்று வெளிவந்த அமரன் திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கை மட்டுமின்றி,தமிழ் சினிமாவிலும் ஒரு பெரிய மைல்கல்லை பதித்தது.இந்த படத்தின் மெகா வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பெரிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி பிஸியாக வலம் வருகிறார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புறநானுறு படத்தின் தலைப்பை 1965-னு மாற்றியுள்ளதாக கூறப்பட்ட நிலையில்,பட ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் சிவகார்த்திகேயன் நடந்து கொண்ட விதத்தை பற்றி பிரபல யூடியூப் பேச்சாளரான பிஸ்மி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க: படத்தால் நடந்த விபரீதம்…”கேம் சேஞ்சர்”பட நாயகி மருத்துவமனையில் திடீர் அனுமதி..!திடீர்
அதாவது படப்பிடிப்பு தளத்தில் நடிகர்,நடிகை,இயக்குனர் கேரவன்கள் வரிசையாக தான் இருக்கும்,ஆனால் சிவகார்த்திகேயன் கேரவன் மட்டும் தனியாக நிறுத்தப்பட்டு அதற்கு பக்கத்தில் ஒரு அலுவலகத்தையே போட்டுள்ளார்,இது படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.மேலும் இப்படத்தில் நடிக்கும் மற்றொரு நடிகரான ஜெயம் ரவி அவர் அமைதியாக அவருடைய காட்சியில் நடித்து முடித்து கேரவன் செல்கிறார்,ஆனால் சிவகார்த்திகேயன் அடக்கி வாசிக்காமல் ஆட்டம் போட்டுகொண்டு இருக்கிறார் என பகிரங்கமாக பிஸ்மி பேசியுள்ளார்.இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கடும் அதிருப்த்தியில் உள்ளனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.