முன்னணி நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என பறந்து பறந்து நடித்துவருகிறார் தற்போது நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ராயன்.
தனுஷின் ராயன் திரைப்படம் குறித்து பிரபல பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் “நடிகர் தனுஷின் சமீபத்திய படங்கள் அனைத்திலும் கத்தி, ரத்தம் அதிகமாக இருக்கிறது. தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு அது மிகப்பெரிய பேரழிவு. இந்தக் கால இளைஞர்கள் திரைப்படங்களில் இருக்கும் நடிகர் நடிகைகளைப் பார்த்துதான் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள். அதிலும் நடிகர் தனுஷோ, தன்னுடைய திரைப்படங்களில் அவனை போடு, இவனைப் போடு, செஞ்சிடுவேன் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.
இளைஞர்களும் இந்த வார்த்தைகளை அதிகமாகப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.ஒருவரைக் கொலை செய்வது பலருக்கும் இப்போது சாதாரணமான விஷயமாக மாறி விட்டது. வடசென்னை, அசுரன், கேப்டன் மில்லர் போன்ற படங்கள் ஆக்ஷன் நிறைந்த படங்களாக வெளியானது இந்தத் திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்காக வன்முறையை ஒரு ஃபார்முலாவாகவே தனுஷ் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார். அடுத்தடுத்த படங்களிலும் அந்த பார்முலாவை பயன்படுத்தி வெற்றி பெற நினைக்கிறார்.ஆனால் அப்படிப்பட்ட படங்கள் இளைய தலைமுறையினருக்கு ஆபத்து என்பதை இன்றைய இளைஞர்கள் உணர மறுக்கிறார்கள் என குறிப்பிட்டார்
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.