இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும் இருக்கிறார். சமீப காலமாகவே இளையராஜா தனது பேச்சுக்களின் மூலம் சர்ச்சையில் சிக்கிக்கொண்டே வருகிறார். பலரும் இளையராஜாவை “ஆணவம் பிடித்தவர்” என விமர்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் தனது பாடல்களை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டிருந்தார். இந்த விவகாரத்தில் இளையராஜா “பணத்தாசை பிடித்தவர்” என்று பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். எனினும் இது அவரது உரிமை என்று அவரை பலரும் ஆதரித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி குறித்து இளையராஜா ஒரு பேட்டியில் பேசியது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் தமிழகத்தில் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“மௌண்ட் பேட்டன் காலகட்டத்தில் இருந்து இந்தியாவை ஆண்ட ஒவ்வொரு பிரதமரையும் எடுத்துப்பாருங்கள். அவர்கள் இந்தியாவிற்காக என்னென்ன செய்திருக்கிறார்கள் என்று பட்டியலிட்டு பாருங்கள். ஒரு பக்கம் மோடி இந்தியாவுக்குச் செய்த நன்மைகளையும் பட்டியலிடுங்கள். இரண்டையும் ஒப்பிட்டாலே யார் சிறந்தவர் என்பது தெரியும்.
காசி விஸ்வநாதர் ஆலயத்தை மறுசீரமைப்பு செய்தவர் யார்? 1988 ஆம் ஆண்டு நான் காசிக்குச் சென்றிருக்கிறேன். அப்போது அது வெறும் சிறுநீர் ஓடும் இடமாகத்தான் இருந்தது. அப்படித்தான் காசி விஸ்வநாதன் ஆலயமும் இருந்தது. இந்த மாற்றத்தை யார் செய்தது?
கங்கை புனிதமானது என பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். அதில் மக்கள் பலரும் அறுவெறுப்பான செயல்களை செய்து வந்தனர். மோடிதான் அதனை சரியான திட்டத்துடன் தூய்மைப்படுத்திக்கொண்டு வருகிறார். தேசத்தை காதலிக்காமல் இதனை உங்களால் செய்ய முடியாது. ஒரு வேளை மோடி இந்த தேசத்தை ஆட்சி செய்யக்கூடாது என்று நீங்கள் நீனைக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் நீங்கள் வேறு எந்த தலைவரையாவது காட்டுங்கள். யாராவது இருக்கிறார்களா? இல்லை. இதுதான் எனது பணிவான கருத்து” என்று கூறினார்.
மேலும் அப்பேட்டியில் பேசிய இளையாராஜா, “மோடியை நான் ஒருமுறை சந்தித்தபோது அவரிடம் கூறினேன், நீங்கள் இன்னும் 20 வருடங்கள் இந்த நாட்டை ஆள்வீர்கள் என்று. அது இப்போது நடந்துகொண்டிருக்கிறது” எனவும் கூறினார்.
இவ்வாறு இளையராஜா மோடியை குறித்து பேசியது தமிழக மக்களால் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இவரை ஆதரித்து வந்த இவரின் ரசிகர்கள் தற்போது எந்த கருத்தையும் கூற முடியாத நிலையில் ஸ்தம்பித்து இருக்கின்றனர்.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
This website uses cookies.