வீட்டுக்கு தெரியாம கமல் கூட அத பண்ணப்போ.. செம அடி வாங்கினேன்.. – மனம் திறந்த வடிவுக்கரசி..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான வடிவுக்கரசி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் சுமார் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார். அத்துடன் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். 1979ல் வெளியான கன்னிப் பருவத்திலே என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். இப்படத்தில் வடிவுக்கரசி நடிகர் ராஜேஷுடன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலங்களில் கதாநாயகியாகவும், பின்னர் முன்னணி நடிகர்கள் பலருடனும் தாய், சகோதரி போன்ற கதாபாத்திரங்களும் ஏற்று நடித்திருக்கிறார். பின்னர் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவுக்கரசி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். குறிப்பாக ரஜினியின் அருணாச்சலம் திரைப்படத்தில் கிழவியாக நடித்து மிரட்டினார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயண அனுபவங்களை குறித்தும் வாழ்க்கையில் நடந்த பல சோகமான சம்பவங்களை குறித்து பேசிய வடிவுக்கரசி, என் கணவர் என்னை விட்டுவிட்டு கிராமத்திற்கு சென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. சில பிரச்சனையால் அந்த குழந்தையை ஹாஸ்டலில் சேர்த்தார்கள். இது எனக்கு தெரியவந்ததும் நானே அந்த குழந்தையை தத்தெடுத்து வளர்த்து ஆளாக்கினேன். இன்று அவள் அமெரிக்காவில் குடும்பத்தோடு நல்ல வசதியாக வாழ்கிறாள் என வடிவுக்கரசி கூறியுள்ளார்.

மேலும் 1987 பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சிகப்பு ரோஜாக்கள் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் வடிவக்கரசி தன்னுடைய இருபதாவது வயதில் நடிகையாக அறிமுகமானார்.

தன் அப்பா தூர்தர்ஷனில் பணியாற்ற வைத்ததாகவும், அப்போது கண்மணி பூங்காவில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்வதை பார்த்து பாரதிராஜா இயக்கத்தில் ஒரு படத்திற்கு ஆடிசனுக்கு அப்பாவுக்கு தெரியாமல் சென்ற சமயத்தில் சிவப்பு ரோஜாக்கள் படத்தில் அல்ட்ரா மாடலான சித்ரா கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்து வந்ததாகவும், இப்படி நடிக்கப்போனபோது தன் அப்பாவுக்கு தெரியாது என்றும், சிகப்பு ரோஜாக்கள் படத்தில் பேட்ச் ஒர்க் நடந்தபோது தன் அப்பாவிடம் வடிவுக்கரசின் ஒரு பொண்ணு நடிக்கிறார் என்று சிலர் போட்டோவை காட்டி, உங்களுடைய மகள் மாதிரியே இருக்கிறாள் என்று கூறியுள்ளார்கள்.

அப்போது, தன் தந்தை கன்னிமாராவில் தன் பெண் வேலை செய்கிறாள் என்று சொல்லி சமாளித்து விட்டதாகவும், பின்னர் தன்னிடம் வந்து சினிமாவில் நடிக்கிறியா என்று கேட்டு தன் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டதாகவும், சினிமாவில் வேலை செய்கிறாயா என்று கண்டுபிடித்து பெரிய சண்டையே நடந்து விட்டதாக வடிவுகரசி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர்தான் பாலமுருகன் என்பவர் தன் அப்பாவிடம் காம சாஸ்திரம் என்ற படத்தில் ஜெய்சங்கருக்கு தங்கச்சியாக உங்கள் மகள் நடிக்கணும் என்று கேட்டிருந்ததாகவும், வேண்டவே வேண்டாம் என்று சொல்லி பின்னர் ஏணிப்படிகள் என்ற படத்தில் நடிக்க வைத்ததாகவும் தன் அப்பா குறித்து வடிவுக்கரசி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…

11 hours ago

வெறுப்பேற்ற கள்ளக்காதல் நாடகம்.. கணவரின் உயிரைப் பறிந்த CRPF வீரர்!

அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…

12 hours ago

சுற்றி வளைக்கும் பாஜக.. திக்குமுக்காடும் திமுக.. பட்ஜெட் மீது கடும் தாக்கு!

டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…

13 hours ago

முதலில் ஒருவர் அறிக்கை விடுகிறார்.. அடுத்து ED சொல்கிறது.. செந்தில் பாலாஜி அட்டாக் பேச்சு!

ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…

14 hours ago

நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!

நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…

15 hours ago

பில்டப் காட்டி சீன் போட்ட நயன்தாரா.. பதிலடி கொடுத்த 90களின் கனவுக்கன்னி!

நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…

15 hours ago

This website uses cookies.