மதுரையில் நடந்த உண்மைச் சம்பவத்தை தழுவியே கேம் சேஞ்சர் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக எஸ்ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம், இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. முன்னதாக, இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீடு உரிமைதாரராக ராக் போர்ட் நிறுவனம் உள்ளது.
இந்த நிலையில், இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள புரோமோஷன் வீடியோவில், நடிகர் எஸ்ஜே சூர்யா பேசியுள்ளார். அதில் பேசிய அவர், “இதுவரை என்னுடைய படங்களுக்கு பெரும் வரவேற்பைக் கொடுத்துள்ளீர்கள். தற்போது ஷங்கர் சாரின் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண், கைரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்டோருடன் நடித்துள்ளேன்.
பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரித்திருக்கிறார். எனது முந்தைய படங்களுக்கு கொடுத்த ஆதரவைப் போன்று இதற்கும் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதன் கதையினை கார்த்திக் சுப்புராஜ், மதுரையில் உள்ள ஒரு கலெக்டரின் வாழ்க்கையில் இருந்து எடுத்து, ஆந்திராவில் நடக்கும் கதையாக எழுதியிருக்கிறார்.
ஷங்கருக்கு ஏற்றதொரு கதை என்பதால், பிரமாண்டமாக செய்திருக்கின்றனர். திருவின் ஒளிப்பதிவு, பிரபுதேவா, ஜானி ஆகிய மாஸ்டர்களின் நடனம், தமனின் இசை என அனைத்துமே நன்றாக வந்துள்ளது. தமிழ், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது.
இதையும் படிங்க: 7 நாளும் வேலை பார்க்கனுமா? கொதித்தெழுந்த தீபிகா படுகோன்!
எனக்கு ரொம்ப கதை பிடித்துப் போய் சிறப்பான முறையில் செய்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். மதுரையில் ஒரு கலெக்டருக்கும், அரசியல்வாதிக்கும் நடந்த உண்மைச் சம்பவம் தான் இந்தக் கதை. நல்ல கருத்துள்ள பிரமாண்ட படமாக வந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.