1980களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து இளைஞர்களின் மத்தியில் கனவுக்கன்னியாக இன்றும் வாழ்ந்து வருபவர் நடிகை சில்க் ஸ்மிதா.
படத்துக்காகத்தான் கவர்ச்சியை காட்டி அதிக சொத்துக்களை சேர்த்தாலும், இல்லாதவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்பவர். திடிரென தற்கொலை செய்த அவரின் மரணம் இன்றும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகளாகவே உள்ளன.
இதனிடையே, இசையமைப்பாளர் கங்கை அமரன் ஒரு பேட்டியில் சில்க் ஸ்மிதாவை பற்றி சில தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், தானும், சில்க் ஸ்மிதாவும் நெருங்கிய நண்பர்கள் என்றும், ஷூட்டிங் இல்லாத நேரங்களில் தனக்கு சில்க் போன் செய்து வீட்டிற்கு வரட்டுமா என்று கேட்பார் என தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், வீட்டிற்கு வந்து தன் மனைவியோடு சமையல் செய்து, சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருப்பார் எனவும், அப்போது பிரேம்ஜி மிகவும் சின்ன பையனாக இருப்பான் தன் மகனைப் பார்த்து இவனை நான் கல்யாணம் பண்ணிகிட்டுமா? என்று கேட்பார் எனவும், தானும் ஓ…கே.. என்று தலையாட்டி சிரிப்பேன் எனவும், அந்த நாட்களை தன்னால் மறக்கவே முடியாது என தெரிவித்துள்ளார்.
தன்னை எங்கு பார்த்தாலும் சில்க், ஓடி வந்து கட்டி பிடித்துக் கொள்வார் எனவும், தன்னை மச்சான் என்று தான் சில்க் அழைப்பார் என தெரிவித்துள்ளார்.
அந்த அளவுக்கு தன்னும் தன் குடும்பத்துடனும், சில்க் நெருங்கி பழகினார் என்றும், சில்க்கை பார்க்கும்போது ஒரு கிராமத்திலிருந்து வந்தவர் போல் தெரியாது எனவும்,
இன்று வரை அவரை போல் ஆடையிலும் சரி, முக அலங்காரத்திலும் சரி யாராலும் ரசித்து ரசித்து தன்னை மெருகேற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.
சில்க் அந்த அளவுக்கு தன்னை தானே மெதுவாக செதுக்கி செதுக்கி சினிமாவிற்காகவே படைக்கப்பட்டவள் போல் மாறினார் எனவும், சில்க் இறந்த போது, தன்னால் ஜீரணிக்க முடியவில்லை எனவும், ஒரு வார காலம் காய்ச்சலில் படுத்துவிட்டேன் என வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார்.
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதமணி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசாங்கத்தை பொருத்தவரை ஆளுநருக்கு எதிரான…
விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
This website uses cookies.