சினிமா / TV

பாட்டு பாடி பாரதிராஜாவை ஆற்றுப்படுத்திய கங்கை அமரன்… மனதை நெகிழ வைத்த வீடியோ…

மகனை இழந்த இமயம்…

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது இறப்பு செய்தி திரைத்துறையினர் மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. 

மகனை இழப்பது என்பது தந்தைக்கு மிகப்பெரிய வலி, இறைவன் பாரதிராஜாவிற்கு மன அமைதியையும் தைரியத்தையும் கொடுக்கட்டும் என்று ரசிகர்கள் பலரும் மனோஜ் பாரதிராஜாவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்தனர். 

ஆற்றுபடுத்திய கங்கை அமரன்

கங்கை அமரனும் பாரதிராஜாவும் இளம் வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்து வந்தவர்கள். இளையராஜா, கங்கை அமரன், பாரதிராஜா ஆகிய மூவரும் தங்களது இளமை காலத்தில் தேனீயில் இருந்தபோதே மிகவும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தவர்கள். கிட்டத்தட்ட மூவரும் ஒரே சமயத்தில் சென்னைக்கு வந்தார்கள். 

இந்த நிலையில் கங்கை அமரன், தனது நண்பரான பாரதிராஜாவை பாட்டு பாடி ஆற்றுப்படுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் பாரதிராஜா நடித்த “கல்லுக்குள் ஈரம்” திரைப்படத்தில் இடம்பெற்ற சிறு பொன்மணி அசையும் என்ற பிரபலமான பாடலை பாடி பாரதிராஜாவை பழைய நினைவுகளுக்குள் கொண்டு சென்றார் கங்கை அமரன். 

பாடலை பாடி முடித்த பிறகு, அந்த பாடல் எழுதப்பட்ட சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார் கங்கை அமரன். இவற்றை எல்லாம் மிகவும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார் பாரதிராஜா. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆக, ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இளையராஜாவின் இசையில் இப்பாடலை எழுதியவர் கங்கை அமரன் என்பது குறிப்பிடத்தக்கது. 

Arun Prasad

Recent Posts

உரிய அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட கட் அவுட்? அஜித் கட் அவுட்டால் எழுந்த சர்ச்சை!

சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற…

26 minutes ago

கோர்ட்டை சீமான் மதிப்பதே இல்லை.. பாட்டெழுதவும், படம் பார்க்க மட்டும் போவாரா? நீதிபதி ஆட்சேபம்!

திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான…

45 minutes ago

பெட்ரோல் விலையும் உயருமா? கலால் வரி உயர்வு : மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…

2 hours ago

கமிஷ்னர் சென்ற கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து.. பரபரப்பு : விசாரணையில் இறங்கிய புலனாய்வு!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…

3 hours ago

இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் : சீமானுக்கு நீதிபதி எச்சரிக்கை!

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…

4 hours ago

This website uses cookies.