ஸ்டுடியோக்குள்ளயே கமலை நாங்க விட மாட்டோம்.. – கடுப்பான பிரபலம்.. இப்படிலாமா பண்ணுவாங்க..!

தமிழ் சினிமாவில் கங்கை அமரன் இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத் திறன்களை கொண்டவர். கங்கை அமரன் ஆரம்பக்காலங்களில் பாடலாசிரியர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு, இதற்காக தொடர்ந்து கண்ணதாசனிடம் வாய்ப்பு கேட்டு வந்தார்.

இதனிடையே, அவரது அண்ணன் இளையராஜா மூலமாக வந்த கங்கை அமரன் துவக்கத்தில் பாடல் வரிகள்தான் எழுதி கொண்டு இருந்தார். இவர் எழுதிய பல பாடல்கள் ஹிட் அடித்தன. அதிலும் குறிப்பாக, உன் பார்வையில் ஒராயிரம், மண்ணில் இந்த காதல் அன்றி போன்ற பாடல்கள் இன்றுவரை மிகவும் பிரபலமானவை என்று சொல்லலாம்.

இதனையடுத்து, 1982 ஆம் ஆண்டு கங்கை அமரன் இசையமைப்பாளரான பிறகு வாழ்வே மாயம் திரைப்படத்திற்கு இசையமைத்தார். கங்கை அமரனை போலவே கமலும் சினிமாவில் அனைத்து துறைகள் குறித்தும் கலை ஞானம் உள்ளவர்.

எனவே, கமல்ஹாசனை வைத்து அந்த காலக்கட்டத்தில் படம் எடுக்கும்போது இயக்கம், இசை அனைத்திலும் அவரது பங்கும் இருக்கும் என்று சொல்லலாம். அதனிடையே, வாழ்வே மாயம் படத்தின் அனுபவம் குறித்து கங்கை அமரன் ஒரு பேட்டியில் பகிர்ந்து உள்ளார். அதில் வாழ்வே மாயம் படத்தின் பாடல்களை கமலுக்காக மாற்றி உள்ளீர்களா?” என கேள்வி கேட்டார்கள்.

அதற்கு உடனே கங்கை அமரன் நாங்கள் கமலை இசையமைக்கிற இடத்துக்குள்ளேயே விட மாட்டோம் என்றும், அவருக்கு அங்கு அனுமதி கிடையாது எனவும், வாழ்வே மாயம் படத்தின் பாடல்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தான் போட்டது என்றும், அது மட்டுமின்றி வாழ்வே மாயம் படம் இறுதி வரை கமல்ஹாசனும் இசையமைக்கும் பகுதிக்கே வரவில்லை என கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

ரோகித்தின் மோசமான உலக சாதனை.. தீயான குல்தீப் யாதவ்.. திணறிய நியூசிலாந்து.. இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…

14 hours ago

மனவருத்தம் இல்லை.. ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் பிரேமலதா அதிரடி பதில்!

ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…

15 hours ago

திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!

சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…

17 hours ago

கூட்டணி குறித்து கேட்டால் இதைச் சொல்லுங்க.. அதிமுகவிடம் எதிர்பார்ப்பு.. முக்கிய காய் நகர்த்தும் இபிஎஸ்

அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…

18 hours ago

வாய்க்காலில் கிடந்த சடலம்.. சிக்கிய நண்பர்கள்.. திருட்டால் பறிபோன உயிர்!

கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…

19 hours ago

மேட்ச் முடிவில் காத்திருக்கும் அதிர்ச்சி.. டாப் 3 வீரர்களின் நிலைப்பாடு என்ன?

இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…

20 hours ago

This website uses cookies.