சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து சுந்தர் சி-வடிவேலு காம்போ இணைந்துள்ளதால் இத்திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இத்திரைப்படம் பூர்த்தி செய்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.
வடிவேலுவின் காமெடி காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைப்பதாக படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இத்திரைப்படம் நிச்சயம் வடிவேலுவுக்கு கம்பேக் தான் என விமர்சகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அஜித் திரைப்படமான “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் வசூலை கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டி வருகிறது “கேங்கர்ஸ்”. “குட் பேட் அக்லி” திரைப்படம் இப்போது வரை உலகமெங்கும் ரூ.220 கோடிகள் வசூல் ஆகியுள்ளது.
இந்த நிலையில் சுந்தர் சியின் “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1 கோடியே 16 லட்சம் வசூல் ஆகியுள்ளதாம். ஆனால் நேற்று தமிழ்நாட்டில் “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் வசூல் ஒரு கோடிதான் என ஒரு தகவல் வெளிவருகிறது. இதனை வைத்து பார்க்கும்போது “குட் பேட் அக்லி” திரைப்படத்தை “கேங்கர்ஸ்” திரைப்படம் ஓரங்கட்டியுள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…
நடிகர் பாக்யராஜ் முன்னணி இயக்குநர், நடிகராக 80 மற்றும் 90களில் திகழ்ந்தார். இவர் உடன் நடித்த நடிகை பூர்ணிமா ஜெயராமை…
This website uses cookies.