தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிதாமகன் படத்தில் நடிகர் கஞ்சா கருப்பு அறிமுகமானார். அதன் பின்னர், பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார்.
2014இல் வேல்முருகன் போர்வெல் சென்ற பெயரில் ஒரு படத்தை சொந்தமாக தயாரித்தார். அந்த படம் சரியாக போகாத காரணத்தால், கஞ்சா கருப்பு தான் சேர்த்து வைத்திருந்த மொத்த சொத்தையும் இழந்துவிட்டார். சொந்த வீட்டை விட்டு தற்போது வாடகை வீட்டில் பிழைக்க வழியில்லாமல் வறுமையில் வாடி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் அடுத்த ஜென்மத்தில் பாம்பாக பிறந்தால் கூட படம் எடுப்பேன் என்று கஞ்சா கருப்பு விரக்தியில் கூறி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கஞ்சா கருப்பு தனது பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் கூட கட்டாததால் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க, அதை பார்த்து எனக்கு கண்களில் கண்ணீர் வருகிறது என்று எமோஷனலாக தெரிவித்து இருந்தார். மேலும், தான் படம் தயாரித்ததால் குடும்பத்தில் ஐந்து உயிர்கள் போய்விட்டது என்றும், அவர் கூறியிருக்கிறார். அதாவது, அவரின் அக்கா மகன் தன்னுடைய ஐயா, பாட்டி மற்றும் மாமா ஆகியோரை இழந்துவிட்டேன் என கஞ்சா கருப்பு வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
This website uses cookies.