விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.
வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார். பெரிய சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த இத்திருமணத்தை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்டோர் விமர்சித்தனர்.
அதன் பின் பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே, அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அண்மையில் தான் மரணமடைந்தார். வனிதா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கூடவே தனது பிஸினஸையும் கவனித்து வருகிறார். கடைசியாக, அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான அநீதி என்ற படத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே, வனிதாவின் மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு சில பல சர்ச்சைகள், விமர்சனத்தை எதிர்கொண்டு வந்த அவர் எதிர்பார்க்காத நேரத்தில் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். மகள் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவார் என்பதை சற்றும் எதிர்பார்க்காத வனிதா கோவாவிற்கு போட்டோ ஷூட் எடுக்க சென்றுவிட்டார். பின்னர் மகளை சந்திக்க ஓடோடி வந்த வனிதா அவரை ஏர்போர்டிலே கட்டியணைத்து பாசத்தை வெளிப்படுத்தினார்.
மேலும் படிக்க: மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியா இது? அழகிய ஃபேமிலி போட்டோ இதோ..!
முன்னதாக, பிக்பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 60 நாட்கள் இருந்த ஜோவிகாவுக்கு ஒரு வாரத்திற்கு ரூ. 2 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாம். அப்படி பார்த்தால் மொத்த சம்பளமாக ரூ. 16 லட்சம் வாங்கியுள்ளார். இதை கேள்விப்பட்டதும் நெட்டிசன்ஸ் 60 நாட்களாக தூங்கிக்கொண்டு மட்டுமே இருந்த ஜோவிகாவுக்கு இம்புட்டு சம்பளமாக என விமர்சித்தும் வந்தனர்.
படிப்பு விஷயத்தில், ஜோவிகாவை நெட்டிசன்கள் அதிகமாக ட்ரோல் செய்திருந்தனர். தற்போது, ஜோவிகா படு கிளாமரான உடையில் போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டு இருந்தார். விதவிதமான கவர்ச்சியடைகளை அணிந்த படி ஜோவிகா நடத்திய செம ஹாட் போட்டோ ஷூட்டை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி ஜோவிகாவை பார்ப்பதற்கு குட்டி நமிதா போல் இருப்பதாக கமெண்ட்கள் செய்தும் வந்தனர்.
இந்நிலையில், ஜோவிகாவை ஹீரோயின் ஆக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கும் வனிதா சமீபத்தில் ஜோதிகாவின் கவர்ச்சி போட்டோ ஷூட்டை வெளியிட்டு பரபரப்பை கொடுத்திருந்த நிலையில், தற்போது வனிதா தன்மகள் நயன்தாரா போன்ற பெரிய அளவுக்கு ஒரு ஹீரோயினாக வேண்டும் என கூறி இருந்தார்.
மேலும் படிக்க: அரசியலுக்கு மட்டும் வந்திடாதப்பா.. பிரபல நடிகருக்கு அம்மா கொடுத்த அட்வைஸ்..!
ஏதோ சும்மா போற போக்குல சொல்கிறார் என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வந்தனர். ஆனால், தற்போது விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து மீடியாவில் வெளியிட்டு வாய்ப்பு வேட்டையில் இறங்கியுள்ளார். இது எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது தெரியவில்லை. இவர் மகளின் புகைப்படங்களை வெளியிட இதனை பார்த்த பலரும் கண்டபடி திட்டி தீர்த்து வந்தனர். சின்னப்பொண்ணு இது வாழ்க்கையாவது நல்லபடியாக இருக்கட்டும், அதுக்கும் ஆப்பு வச்சிராதீங்க, நல்ல டிரஸ் போட்டு போட்டோ ஷூட் பண்ணுங்க என அட்வைசையும் கொடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் ஜோதிகா பணியாற்றி உருவாகி வரும் TEENZ படத்தின் பிப்பிலி பிப்பிலி என்ற பாடல் வெளியானது. ஜோதிகாவை அப்படியே அச்சு அசல் உரித்து வைத்திருக்கும் இளம் பெண்ணின் புகைப்படம் இந்த சமயத்தில் இணையதளத்தில் கசிந்து வருகிறது. இந்த புகைப்படங்களை பார்க்கிற ரசிகர்கள் ஜோவிகாவை போல இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…
பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…
யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…
This website uses cookies.