ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்தை ஆரவாரமாக வரவேற்க ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பு இத்திரைப்படத்தின் மேல் இருந்து வரும் நிலையில் முன்பதிவில் டிக்கெட்டுகள் அனைத்தும் ராக்கெட் வேகத்தில் விற்று வருகின்றன. இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள ஒரு பிரபல திரையரங்கத்தில் முதல் காட்சியை பெண்களுக்கென்று ஒதுக்கியுள்ளனர்.
ஈரோடு மேட்டூர் ரோட்டில் அமைந்துள்ள மிகப் பிரபலமான திரையரங்கம் ஸ்ரீ சக்தி சினிமாஸ். நாளை இத்திரையரங்கில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் நாளை (ஏப்ரல் 10) காலை முதல் காட்சி பெண்களுக்காக மட்டுமே திரையிடப்பட உள்ளது. இந்த செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெண்களுக்காக திரையிடப்படும் இந்த முதல் காட்சியை புக் செய்வதற்கான வாட்ஸ் ஆப் எண்ணை அத்திரையரங்கத்தின் அதிகாரப்பூர்வ “X” தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.